districts

img

பல்கலைக்கழக கட்டண உயர்வை கண்டித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.18 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் குடவாசல் அரசு கலைக் கல்லூரிகளில் பாரதி தாசன் பல்கலைக்கழக கட்டண உயர்வுக்கு எதிராகவும், கட்டண உயர்வை திரும்பப் பெறக்  கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நன்னிலம் கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ம.ஹரிஷ் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஜெ. தயாநிதிமாறன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பா.லெ.சுகதேவ் போராட் டத்தை விளக்கி உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் சு.கௌசி கன், மாவட்ட துணைச் செயலாளர் மு.சூரிய பிரியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வ.தியாக ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி குடவாசல் அரசு கலைக் கல்லூரியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ர.சிவனேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பா.லெ.சுகதேவ் போராட்டத்தை விளக்கிப் பேசினார். மாவட்டத் துணைச் செயலாளர் க.கலைச்செல்வன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் மு.முகேஷ்ராஜன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் பாபு நிஷா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.