districts

img

இயற்கையை பாதுகாக்கும் அரணாக மாணவர்கள் இருக்க வேண்டும்

மாவட்ட வன அலுவலர் அறிவுரை அரியலூர், பிப்.2- இயற்கையை பாது காக்கும் அரணாக மாணவர் கள் இருக்க வேண்டும் என் றார் அரியலூர் மாவட்ட வன  அலுவலர் இளங்கோவன். உலக ஈரநில தினத் தையொட்டி அரியலூரை அடுத்த தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி யில் வனத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை விழிப் புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் பேசுகையில், “அரியலூர் மாவட்டத்தில் கரை வெட்டி பறவைகள் சரணா லயம், ஈர நிலமாக அறிவிக் கப்பட்டுள்ளது. இதன்மூலம்  பறவைகள் பாதுகாக்கப் படும். அதிகமான வெளி நாட்டுப் பறவைகளும் வரு வதற்கு வாய்ப்பு உள்ளது. ஈர நிலங்களை பாது காக்க ஏரி, குளம், கண்மாய்  நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு இன்றியும், கழிவு பொருள்கள் கலக்கா மலும் பாதுகாக்க வேண்டும். நீர் நிலைகளால்தான் பல்லுயிர் பெருக்கம் ஏற்படு கிறது. இதனால் இயற்கை சமநிலை ஏற்படுகிறது. மாணவர்கள் இயற்கையை பாதுகாக்கும் அரண்களாக இருக்க வேண்டும்” என்றார்.  பின்பு அவர், ஸ்வீட்  டிரஸ்ட் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு துணிப் பைகள் மற்றும் எழுதுப் பொருள்கள், நோட்டுகளை வழங்கினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், வனச்சரக அலுவலர் முத்துமணி, ஸ்வீட் டிரஸ்ட் இளவரசன் மற்றும் தலைமை ஆசிரி யர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.