districts

img

தேசிய இளைஞர் திருவிழாவுக்கு மாணவர்கள் தேர்வு

தஞ்சாவூர், நவ.9 -  தேசிய இளைஞர் திரு விழா 2024 ஜனவரியில் புது தில்லியில்  நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஒவ் வொரு மாநிலத்தில் இருந் தும், மாணவர்கள் குழு கலந்துகொண்டு தங்களது கலைத் திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர். அதன் முன்னேற்பாடாக திருச்சிராப்பள்ளி பாரதி தாசன் பல்கலைக்கழகம் சார்பாக, தஞ்சாவூர் மாவட்ட அளவிலான மாணவர்கள் குழுவினை தேர்வு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை யன்று தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நடைபெற்றது.  மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவ லர் கொ.மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார்.  கல் லூரி முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் இரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட குழும இயக்குநர் செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி பாரதி தாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் இலக் குமிபிரபா நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்வதில் நெறி யாளர்களாக செயல் பட்டனர்.  இந்நிகழ்ச்சியில், தஞ்சா வூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டு தங்களது கலைத்திறமை களை வெளிக்காட்டினர்.  முன்னதாக தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும், தஞ்சாவூர் மாவட்ட தேசிய இளைஞர் திருவிழாவிற்கான சிறப்பு அலுவலருமான நா.சந்தோஷ்குமார் வர வேற்றார். நிறைவாக தமிழ் துறை தலைவர் வீ.வெற்றி வேல்  நன்றி கூறினார். நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.