புதுக்கோட்டை, நவ.7 - புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ் வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாண வர்கள், மண்டல அளவிலான அறிவி யல் மாநாட்டில் தேர்ச்சி பெற்று தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக் குத் தேர்வாகியுள்ளனர். ஒன்றிய அரசின் அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்றத் துறை, தமிழ்நாடு அறி வியல் இயக்கம் இணைந்து 31ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகின்றன. மாவட்ட அளவிலான மாநாடுகளின் நிறைவில், மண்டல அளவிலான மாநாடு புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்கு ளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடை பெற்றது. ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வுக் கான சுற்றுச்சூழல் அமைப்பைப் புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த 145 ஆய்வுக் கட்டுரைகளை பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்தனர். இதில் புதுக்கோட்டை, திருக்கோ கர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முகமது பயாஸ், முகமது அப்சர் ஆகியோர், ‘உங்கள் சுற்றுச்சூழல் அமைப்பை அறிந்து கொள்ளுங்கள்’ என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தனர். இந்தக் கட்டுரை உள்பட 45 ஆய்வுக் கட்டுரைகள் நவ.25, 26 தேதிகளில் கோவையில் நடைபெற வுள்ள மாநில மாநாட்டுக்கு தகுதி பெற்றுள்ளன. வெற்றி பெற்ற மாணவர்களையும், பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தியையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராம லிங்கம், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மா.சின்ன துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், எழுத்தாளர் நா.முத்து நிலவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.