districts

img

சர்வதேச யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை, பிப்.17 - இலங்கையில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வெற்று சாதனை படைத்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் ஸ்ரீலங்கா நேசனல் யோகா அசோசியேசன், ஆசியன் யோகா பெடரேசன் கொழும்பு சிவ  விஷ்ணு யோகா பீடம் இணைந்து சர்வதேச  யோகா போட்டியை நடத்தியது. இதில், மலே சியா, சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங், அமெரிக்கா போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.  இதில் இந்தியா சார்பில் புதுக்கோட்டை  ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பா.சஞ்சீத் பாபு, பா. சுர்ஜீத் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். சஞ்சீத் பாபு 9-12 வயதினருக்கான யோகா  போட்டியில் முதலிடம் பெற்று சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றார்.  மாணவர் சுர்ஜீத் பாபு 6-8 வயதினருக்கான பிரிவில் முதலிடம் பெற்று பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றார்.  பரிசுபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா கல்வி அமைச்சர் பு.அரவிந்த் குமார் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணே சன், இந்திய தூதரக செயலாளர் நவ்யா சிங்லா ஆகியோர் சாம்பியன் பட்டம், சான்றி தழ்கள் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கிப் பாராட்டினர். சர்வதேச யோகா போட்டியில் சாம்பி யன் பட்டம் வென்று பள்ளிக்கு வந்த மாண வர்கள் சஞ்சீத் பாபு மற்றும் சுர்ஜீத் பாபு  ஆகியோரை, பள்ளியின் முதல்வர் கவிஞர்  தங்கம் மூர்த்தி பூங்கொத்து கொடுத்து வர வேற்றார். பள்ளியின் யோகா பயிற்சி ஆசிரி யர்கள் ரெ.பாண்டியன், புவனா பாண்டியன் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.