தஞ்சாவூர், அக்.29 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா பள்ளி மாண வர்கள் சார்பில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு தீபாவளி பரிசாக புத்தாடைகள் வழங்கப்பட்டன. தீபாவளியை ஒவ்வொரு குடும்பத்தின ரும் சிறப்பாக கொண்டாட விரும்பும் இந்த நேரத்தில், பேராவூரணி குமரப்பா பள்ளி மாணவர்கள் தங்கள் சேமிப்பில் இருந்து, அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாண வர்களுக்கு தீபாவளி பரிசாக புத்தாடைகள் வழங்கி மகிழ்வித்தனர். பேராவூரணி கிழக்கு, பெத்தநாச்சிவயல், கஞ்சங்காடு, செருவாவிடுதி உடையார்தெரு, பைங்கால், காரங்குடா, நாடியம், களத்தூர் மேற்கு, களத்தூர் கிழக்கு, பெருமகளூர், குறவன்கொல்லை ஆகிய அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 340 மாணவர்களுக்கு புத்தா டைகள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாமா செந்தில்நாதன், சாகுல்ஹமீது, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர். புத்தாடைகள் வாங்க தங்களது சேமிப்பை செலவிட்ட குமரப்பா பள்ளி மாணவர்களை, பள்ளி தலைவர் ஸ்ரீதர், நிர்வாக இயக்கு நர் நாகூர் பிச்சை, அகாடமிக் டைரக்டர் அஸ்வின் கணபதி, முதல்வர் சர்மிளா, நிர்வாக அலுவலர் சுரேஷ், அறங்காவ லர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷா பேகம், ஆசிரியர்கள் பாராட்டினர்.