districts

திருச்சி முக்கிய செய்திகள்

தூய்மைப் பணியில்  ஈடுபட்ட மாணவர்கள்

அறந்தாங்கி, செப்.28 -  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கம், ப்ரண்ட்ஸ்  ரோட்டரி கிளப் ஆதர வுடன்  பெருநாலூரில் இயங்கி வரும் அரசு  கலை மற்றும் அறிவியல்  கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவ,  மாணவிகள் அறந்தாங்கி காவல் நிலைய வளாகத் தில் இருந்து நகர வீதி கள் வரை தூய்மைப் பணி செய்தனர். இதற்கு திட்ட அலுவலர் எஸ்.ரமேஷ்  தலைமை வகித்தார். முன்னதாக நகர வீதி களில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை களை அகற்றி, அறந் தாங்கி காவல் நிலைய  வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணியை  துவங்கினர். இப்பேரணி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள்  வழியாக அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே நிறைவடைந்தது.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம்,  செப்.28 - தஞ்சாவூர் விற்ப னைக் குழு, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்  கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது. ஒழுங்குமுறை விற்ப னைக் கூட மேற்பார்வை யாளர் சிவானந்த் முன் னிலை வகித்தார். ஏலத் தில் பாபநாசம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிரா மங்களில் இருந்து 233  விவசாயிகள் 21 மெ.டன்  பருத்தி எடுத்து வந்த னர். கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 5 வணிகர்கள் பங்கேற்று, அதிகபட்சம் குவிண்டா லுக்கு ரூ.7,299, குறைந்த பட்சம் ரூ. 5,899, சராசரி  ரூ.6,689 என விலை நிர்ண யித்தனர். பருத்தியின் மதிப்பு ரூ.14.5 லட்சம்.

கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.28 - அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் ஒருங்கி ணைப்பு குழு சார்பில் சனிக்கிழமை போராட்ட ஆயத்த  மாநாடு திருச்சியில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கமுனி யாண்டி தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் சமீர் அகமது, அரசு கல்லூரி ஆசிரி யர் மன்றத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சிவராமன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றக் கூடிய கவுரவ விரிவுரையா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யுஜிசியின் அடிப்படை ஊதியமான ரூ.57,500-ஐ 12 மாதங்களுக்கும் வழங்க வேண்டும். பெண் கவுரவ  விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர் மாதம் பணியாற்றக் கூடிய  கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு  போராட்டத்தை நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.  மாநாட்டில் மாநில ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிச்சைமுத்து நன்றி கூறினார்.

நாட்டு நலப்பணித் திட்ட  சிறப்பு முகாம் துவக்க விழா

தஞ்சாவூர், செப்.28 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா பள்ளி சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு  முகாம் துவக்க விழா, சொர்ணக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, குமரப்பா கல்விக்குழும அகாடமிக் டைரக்டர் பொறியாளர் எஸ்.அஸ்வின் கணபதி தலைமை  வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.விஜய பாஸ்கரன் முன்னிலை வகித்தார். குமரப்பா பள்ளி நிர்வாக  அலுவலர் ஆர்.சுரேஷ் வரவேற்றார்.  முகாமையொட்டி, கோவில் வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடை பெற்றது. தொடர்ந்து அரசுப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று கள் நடப்பட்டன.  நிகழ்ச்சியில் கிராம கமிட்டி நிர்வாகிகள், பொது மக்கள், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெயவீரன்,  ஆசிரியர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆசிரியர் எஸ்.விஜய்  நன்றி கூறினார். தாமரங்கோட்டை  பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட  சிறப்பு முகாம் துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.  பள்ளித் தலைமை ஆசிரியர்  அ.கி.அழகேசன் தலைமை  வகித்தார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஜெ. அருண்தேவி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலை வர் கே.கே.கனகசபை முகாமை துவக்கி வைத்தார். 

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில்  கண்காணிப்பு கேமிரா பொருத்த வலியுறுத்தல்

அரியலூர், செப்.28 - அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்களிலும் அவசியம் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த நடவடிக்கை தேவை என்று விவசாயிகள் வலியுறுத்தினர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், ஆதார் அட்டையின் அடிப்படையில் விதை நெல் விநியோகிப்பதற்கு பதிலாக சிட்டா அடிப்படையில் விதை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்த இ.நாம் திட்டத்தில் விவசாயிகளின் விளைபொருள்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், முறைகேடுகளை தடுக்க அங்கு கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, கண்காணிக்க வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், விலை மற்றும் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியின் கூலித் தொகை போன்ற விவரங்களை, அனைவருக்கும் தெரியும் வகையில் பிளக்ஸ் வைக்க வேண்டும். நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மரப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு வங்கிகள் கடனுதவிகள் வழங்க வேண்டும். நெடுஞ்சாலையோரங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். சுக்கிரன் மற்றும் தூத்தூர் ஏரிகளில் நீர் மட்டத்தை உயர்த்த புள்ளம்பாடி வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும். தா.பழூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பொன்னாறு பாசன வாய்க்கால்களில் அதிகளவில் தண்ணீர் திறக்க வேண்டும். தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரிகளை அளவீடு செய்து, எல்லைக் கல்களை நட வேண்டும்.  விதைகள் மற்றும் உரங்களை போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். தூத்தூர்-வாழ்க்கை கிராமத்துக்கு இடையேயான கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவுடன் கூடிய கதவணை கட்ட வேண்டும்” என்றனர். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர் பொ.ரத்தினசாமி, அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:  இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

அரியலூர், செப்.28 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரைச் சேர்ந்தவர் கிங்ஸ்லின் தேவக்குமார்(27). கடந்த  28.11.2020 அன்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்தும், சிறுமியின் புகைப்படத்தை தன் நண்பர் களுக்கு காண்பித்து தவறாக சித்தரித்தும் பேசியுள்ளார்.  இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட  ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர், கிங்ஸ்லின் தேவக்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது  செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து, வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை  விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி கிங்ஸ்லின் தேவ குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயி ரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  நெல் கொள்முதல் தொடக்கம் பாபநாசம், செப்.28 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி  ஊராட்சி, வெண்ணுக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் குறுவை சாகுபடி நெல் கொள்முதல் தொடங்கி  வைக்கப்பட்டது. கொள்முதல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் பழனி, முன்னாள் ஊராட் சித் தலைவர் செங்குட்டுவன், ஊராட்சி உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.    

தாட்கோ கடனுதவிகள்  பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், செப்.28 -  திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடனுதவி கள் வழங்கப்படுகின்றன. தாட்கோ மான்யத்துடன்கூடிய கடன் உதவி திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிப்ப வர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 55 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். CM ARISE திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கிட திட்டத் தொகை அதிகபட்சமாக ரூ.10 லட்சம், அதில் 35 சத வீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் மானியத் துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது. PM AJAY  திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கிட திட்டத்தொகை அதிக பட்சமாக ரூ.1 லட்சம், அதில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.50,000 மானியத்துடன் கூடிய வங்கி கடனு தவி வழங்கப்படுகிறது.  நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின்கீழ் நில மற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழி லாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50  சதவீதம் அல்லது  அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானி யம் விடுவிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சார்ந்த வர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மனைவியைக் கொன்ற  கணவருக்கு ஆயுள் சிறை

புதுக்கோட்டை, செப்.28-  குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த  கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக் கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரத்திப்பட்டியைச் சேர்ந்த சேட்டு (42) என்பவருக்கும், மங்கதேவன்பட்டியைச் சேர்ந்த பிரியா  (27) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்  தகராறு அடிக்கடி ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஒரு முறை ஊரில் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைத்துள்ள னர். இந்நிலையில் கடந்த 2020 டிசம்பர் 28 ஆம் தேதி மாலை வீட்டில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு  ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியா, தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்  கொண்டபோது, கணவர் சேட்டு தீயிட்டுக் கொளுத்தி யுள்ளார். காயங்களுடன் துவாக்குடி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு பிறகு மாவட்ட அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்ட பிரியா, 5 நாட்கள் கழித்து சிகிச்சைப்  பலனின்றி உயிரிழந்தார். முன்னதாகவே குற்றவியல் நடுவர் நீதிபதி, மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியாவிடம் மரண  வாக்குமூலம் பெற்றுள்ளார். அதில் கணவர் தீயிட்டதைக்  குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாத்தூர் போலீ சார் தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி சேட்டுவைக் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி  ஏ.கே.ரஜினி வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில்  குற்றவாளி சேட்டுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறி னால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டது.

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.28 - பொதுத்துறை, அரசுத் துறைகளை தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும். தேசியக் கல்விக்  கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி   தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில்  கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாபு, தமிழ்நாடு  அரசு தொழிற்பயிற்சி பள்ளி அலுவலர் சங்கத்தின் மாநில  செயலாளர் நவநீதன், சிஐடியு மாநகரச் செயலாளர் ரெங்க ராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். மாநில துணைத் தலை வர் பெரியசாமி சிறப்புரையாற்றினார்.

தாட்கோ மூலம் மானியக் கடனுதவி: தமிழக முதல்வருக்கு பயனாளிகள் நன்றி

திருவாரூர், செப்.27 - தமிழ்நாடு முதலமைச்சர் கடைக்கோடித் தமிழரின் கனவுகளை தாங்கி அனைவ ரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற லட்சியத் திற்கிணங்க, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்க வைத்து,  தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக  செயல்படுத்தி வருகிறார். மக்களின் சமூக பொருளாதாரத்தினை முன்னேற்றும் நோக்கில் பல திட்டங்களை தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தி வரு கிறார்.  அதனடிப்படையில், தாட்கோ மானியத் துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படு கிறது. இந்நிலையில், “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு  வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்ற  பயனாளிகள் தெரிவித்ததாவது:  பயனாளி ரமேஷ்குமார் கூறுகையில், “நான் குடவாசல் தாலுகா, மஞ்சக்குடி, மேலத்தெருவில் வசித்து வருகிறேன். தினக் கூலியாக வேலை பார்த்து குடும்பத்தினை நடத்தி வந்தேன். வெளிநாட்டில் வேலை பார்க்கச் சென்றேன். ஆனால், ஒரு வரு டத்திலேயே திரும்ப ஊருக்கு வந்துவிட்டேன். ஊருக்கு வந்து எங்கும் வேலைக்குச் செல்லா மல் சுய தொழில் செய்யலாம் என்று முடி வெடுத்தேன்.  இந்நிலையில் என் நண்பர் ஒருவர் தாட்கோ அலுவலகம் குறித்தும், அவ்வலு வலகத்தில் செயல்படுத்தப்படும் திட்டம்  குறித்தும் என்னிடம் கூறினார். நான் நேரில் தாட்கோ அலுவலகம் சென்று திட்டம் குறித்து  கேட்டறிந்து மானியத்துடன் கூடிய கடனு தவிக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த குறுகிய காலத்திலேயே சேங்காலிபுரம் இந்தி யன் வங்கி மூலம் ரூ.3.36,00-ல், ரூ.1,17,600 மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்று  மூன்று சக்கர சுமை வாகனம் வாங்கி  எனது பொருளாதாரத்தினை உயர்த்தியு உள்ளேன். இவ்வாய்ப்பினை தாட்கோ மூலம்  உருவாக்கி தந்த தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு நெஞ்சார்ந்த நன்றி” என்றார். பயனாளி கண்ணன் கூறுகையில், “நான்  குடவாசல் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு தெரிந்த தொழில் ஆட்டோ ஒட்டு வது மட்டுமே. என்னிடம் சொந்த ஆட்டோ இல்லாததால் வாடகை ஆட்டோ எடுத்து ஒட்டி  வந்தேன். ஆனால் எனக்கு அதில் எந்தவித  பயனும் இல்லை. பின்னர், எனது அண்ண னின் தாட்கோ அலுவலகம் குறித்து கூறி னார். நான் நேரில் தாட்கோ அலுவலகம் சென்று மானியத்துடன் கூடிய கடனுதவிக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த பிறகு வங்கி மூலம் ரூ.3.72,250-ல் ரூ.1,30,288 மானி யத்துடன் கூடிய வங்கி கடன் பெற்று பயணிகள் ஆட்டோ வாகனம் வாங்கி எனது பொருளாதாரத்தினை உயர்த்தியுள்ளேன். இவ்வாய்ப்பினை உருவாக்கி தந்த முதல மைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி” என்றார். தொகுப்பு:  மீ.செல்வகுமார்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவாரூர் மாவட்டம்