புதுக்கோட்டை, பிப்.22- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நகரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளில் போதிய வகுப்பறை இல்லாததால் பெற்றோருடன் மாணவர்கள் புதன்கிழமையன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவரங்குளம் ஒன்றியம் நகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1900-ஆம் ஆண்டு திண்ணைப் பள்ளிக்கூட மாக தொடங்கப்பட்டது. 1937-ஆம் ஆண்டு முதல் தனி கட்டடத்தில் நடத்த ப்பட்டது. சுமார் 123 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் சுமார் 80 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால், மாணர்களின் எண்ணி க்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறை கள் இல்லை. இதனால், அங்கன் வாடிக்காக கட்டப்பட்ட உணவுக் கூடம் வகுப்பறையாக மாற்றப் பட்டுள்ளது. அங்கன்வாடியை சமுதாயக் கூடத்திற்கு மாற்றி செயல்படுத்தி வருகின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லாத தால் மாணவர்கள் உட்காரக்கூட முடி யாமல் திணறி வருகின்றனர். இடநெருக்கடியால் மாணவர்கள் தங்களது புத்தகப் பைகளைக்கூட வெளியில் வைத்துவிட்டே வகுப்புகளுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மரத்தடியில் அமர்ந்து போராட்டம் பழைய பழுதான, ஆபத்தான கட்டடங்களை அகற்ற வேண்டும். புதிய வகுப்பறைகளைக் கட்டித்தர வேண்டும். நாய் தொல்லை யிலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற சுற்றுச்சுவர் வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும் என்ற கோரிக்கை களை பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் பல வருடங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுநாள் வரை கோரிக்கை நிறைவேற்றப்படாத தால் புதன்கிழமையன்று பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஒன்று திரண்டனர். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் மரத்தடியில் அமர வைத்து தாங்களும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலு வலர் சண்முகம், திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணா கரன், வட்டாட்சியர் செந்தில் நாயகி, துணை வட்டாட்சியர் பழனியப்பன் உள்பட பல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அதிகாரி கள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.