districts

img

சிஏஏ சட்டம் அமல் பாஜக அரசை கண்டித்து மாணவர் சங்கம் போராட்டம்

புதுக்கோட்டை,  மார்ச் 12 - குடியுரிமை திருத்தச்  சட்டத்தை அமல்படுத்தி யதைக் கண்டித்து இந்திய  மாணவர் சங்கம் சார்பில்  புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள அரசுக் கல்லூரி களின் முன்பாக செவ்வாய்க் கிழமை போராட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை அரசு  மன்னர் கல்லூரி முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின்  மாவட்ட துணைத் தலைவர்  இரா.வசந்தகுமார் தலைமை வகித்தார். கிளைத் தலை வர் தாரணிப்பிரியா, செயலா ளர் தனுஷ்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். போராட்டத்தின் நோக் கத்தை விளக்கி மாவட்டச்  செயலாளர் சா.ஜனார்த்த னன், நகரச் செயலாளர் மகா லெட்சுமி ஆகியோர் பேசி னர். கறம்பக்குடி அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி யில் நடைபெற்ற போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் சா. பிரியங்கா தலைமை வகித் தார். அறந்தாங்கி அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூ ரிக்கு சங்க நிர்வாகி வாசு தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் பேசினர். கும்பகோணம் சிஏஏ சட்டத்தை அமல் படுத்திய ஒன்றிய அரசை  கண்டித்து கும்பகோணத் தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. சங்க கிளைச் செயலாளர் கோபிநாத் தலைமையில் கும்பகோணம் அரசு கலைக்  கல்லூரி முன்பு நகலை எரிப்பு  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் பிரதாப் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.