தஞ்சாவூர், ஆக.23 - பிஎஸ்எப் மாணவர் அமைப்புக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளதைக் கண்டித்து, தஞ்சையில் புதிய பேருந்து நிலையம், பெரி யார் சிலை அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்வி வளாக ஜனநாயக உரிமையை பறிக்கும் விதமாக மும்பையில் உள்ள டாடா சமூகவியல் உயர்கல்வி நிறுவனம், Progressive Students Forum (PSF)-ஐ தடை செய்திருப்பதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சந்துரு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சரோஜினி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். கிளை நிர்வா கிகள் மற்றும் ஏராளமான மாணவர்கள், ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.