தஞ்சாவூர், பிப்.21- இந்தித் திணிப்பில் இருந்து செம்மொழி தமிழ் மொழி யை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும், தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஏபிவிபி குண்டர்கள் தாக்குதலை கண்டித்தும், இந்திய மாணவர் சங்கம் சார்பில், தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் பிரேம் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் கு.சந்துரு பேசினார். வினோத் நன்றி கூறினார். திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.