கோவை, செப்.23- கிராமப்புற பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மற்றும் விடுதி களை அரசு அமைத்து வருகிறது, இந்த வாய்ப்புகளை மாண வர்கள் பயன்படுத்தி படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார். கோவை மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத் துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப் பணி களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக வரப்பட்டி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் துவக்க பள்ளியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகளை அமைச்சர் கயல்விழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக பள் ளிக்கு வருகை தந்த அமைச்சருக்கு பள்ளி குழந்தைகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் கயல் விழி செல்வராஜ், துவக்கத்தில் பள்ளிக் குழந்தைகள் தமிழ் தாய் வாழ்த்து பாடலைப் பாடியதை நான் வியந்து பார்த்தேன், பதிவு செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பு செய்வார்கள், ஆனால், இங்கு குழந்தைகளே அழகாக மழலை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து பள்ளிகளிலும் இதே போன்ற நடை முறை செயல்படுத்த வேண்டும். மாணவர்கள் செல்போன்கள், தொலைக்காட்சிகளில் நேரம் செலவிடுவதை விடுத்து, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளிடம் செல்போன்களை கொடுப் பதை பெற்றோர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். சமூகத் தில் பின் தங்கிய மாணவர்கள் படிப்பதற்காக எண்ணற்ற திட் டங்களை செயல்படுத்தி வருகிறோம். கிராமப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மற்றும் விடுதிகளை அரசு அமைத்து வரு கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் வரும் காலங்களில் படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும், என் றார்.