districts

img

மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஆக.20- கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மாணவி கும்பல் பாலியல்  வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித் தும், குற்றவாளிகளுக்கு உரிய  தண்டனை பெற்றுத் தர வலி யுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத் தின் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள பொ றையார் த.பே.மா.லு கல்லூரியில் இந்திய மாணவர் சங்க மாவட்டக்  குழு உறுப்பினர் சுவேதா தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்ட தலைவர் அமுல் காஸ்ட்ரோ, ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.பிரவீன் ஆகியோர் உரை யாற்றினர். 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதேபோன்று மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் அன்புமணி, வசந்த் ஆகி யோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மணிபாரதி, மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் சத்தியபிரியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் அபினேஷ் மற்றும்  கல்லூரி துணைத் தலைவர் சஞ்சய் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு இந்திய மாணவர் சங்கத் தின் மன்னர் கல்லூரி நிர்வாகி தனுஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி, துணைத் தலைவர் வசந்த குமார், செயற்குழு உறுப்பினர் மகா லெட்சுமி, நகரச் செயலாளர் சந்துரு  உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். கறம்பக்குடி அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் நடை பெற்ற போராட்டத்திற்கு கல்லூரி கிளை நிர்வாகி பூவராகவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் இரா.வசந்த குமார், மாவட்டக் குழு உறுப்பினர் ஹரிராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  தஞ்சாவூர் தஞ்சாவூரில் இந்திய மாணவர்  சங்கம், மன்னர் சரபோஜி கல்லூரி  கிளை சார்பில் வகுப்பு புறக்கணிப்பு  போராட்டம் நடைபெற்றது. கிளை துணைத் தலைவர் சரோஜினி தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார். கிளை  நிர்வாகிகள் கண்டன முழக்கங் களை எழுப்பினர்.