districts

img

பட்ஜெட் நகல் கிழித்தெறியும் போராட்டம்: அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தின

தஞ்சாவூர், பிப்.6-  தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து இதர உழைக்கும் மக்கள் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித பலனும் இல்லை. தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் பலனளிக்காத, பயன்படாத, கார்ப்பரேட் சேவையை பின்பற்றுகின்ற ஒன்றிய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாவட்ட  தலைநகரங்களில் பிப்ரவரி 6 ஆம் தேதி பட்ஜெட் நகல் கிழித்தெறியும் போராட்டம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கே.ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன் முன்னிலை வகித்தார்.  நிதிநிலை அறிக்கையில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்ட எந்த அம்சங்களும் இல்லை. நீண்ட காலமாக மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளான தொழிலாளர்கள் விரோத நான்கு சட்ட தொகுப்புகள் திரும்பப்பெறுதல், மின்சார சட்டம், மோட்டார் வாகனச் சட்டங்கள் திரும்பப் பெறுவது, கார்ப்பரேட்டுகளுக்கான சேவையை நிறுத்துவது உள்ளிட்ட எந்த விதமான அம்சங்களும் இடம் பெறவில்லை.  இந்தப் போராட்டத்தில் தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், காளிமுத்து, ராஜேந்திரன், சோமசுந்தரம், ஏஐடியுசி நிர்வாகிகள் சி.சந்திரகுமார், வெ.சேவையா, துரை. மதிவாணன், தி. கோவிந்தராஜன், பொன். தங்கவேலு சிஐடியு நிர்வாகிகள் கே.அன்பு, இடிஎஸ்.மூர்த்தி, சாய் சித்ரா, செங்குட்டுவன், ஜீவா, ஐஎன்டியுசி நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், ஏ.ரவி, ராமமூர்த்தி, வெங்கடாஜலம், பாரதிதாசன், ஏஐசிசிடியு நிர்வாகிகள் ரமேஷ், ஜெயபால், மாரியப்பன், நடராஜன், மக்கள் அதிகாரம் ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் தேவா, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை  பொதுச் செயலாளர் கோதண்டபாணி உள்ளிட்டார் பங்கேற்றனர். முன்னதாக ஒன்றிய நிதி நிலை அறிக்கை நகல் கிழித்தெறியப்பட்டு ஆர்ப்பாட்டம் துவங்கியது.  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மாலை ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன் தலைமையில் ஒன்றிய நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தேவா, சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம், விவசாய சங்க நிர்வாகி ஆர். உதயகுமார், இடதுசாரிகள் பொது மேடை  ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவர் தியாகராஜன், மகஇக இராவணன், கரிகாலன், உழவர் உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் த.கிருஷ்ணன், விசிறி சாமியார் முருகன், சிபிஐ மாவட்டப் பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  புதுக்கோட்டை தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், ஒன்றிய பட்ஜெட் நகல் கிழிப்பு, புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்றது.  போராட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவர் அ.ரெத்தினம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தொமுச பேரவைச் செயலாளர் எம்.வேலுச்சாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ப.ஜீவானந்தம், சிஐடிய மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா, தொமுச மாவட்டப் பொருளாளர் எஸ்.மணிமொழியன், ஏஐடியுசி மாவட்டத்தலைவர் உ.அரசப்பன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் சி. அன்புமணவாளன், துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  சீர்காழி  சீர்காழி பேருந்து நிலையம் அருகில் விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க அரசின் நிதிநிலை நகல் எரிப்பு போராட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டு பட்ஜெட் நகலை எரித்து கண்டன முழக்கமிட்டனர்.  ஜெயங்கொண்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடந்த, எரிப்பு போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆர். மணிவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம் வெங்கடாஜலம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.  வி.தொ.ச மாவட்டச் செயலாளர் கந்தசாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் பத்மாவதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரவீந்திரன், சிபிஎம் செந்துறை வட்டச் செயலாளர் அர்ச்சுனன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் இளவரசன், ஒன்றியச் செயலாளர் உத்திராபதி, விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் தனவேல், சேகர், குமார், பெரியசாமி, வேம்பு, பல்கீஸ்,அரசு போக்குவரத்து சிஐடியு நிர்வாகிகள் நீலமேகம், வெங்கடாஜலம், சங்கர் மற்றும் வி.ச நிர்வாகிகள் மனோகரன், ராமமூர்த்தி, கலியமூர்த்தி, காசிநாதன், ஜெயராமன் மற்றும் சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் மைதீன்ஷா மற்றும் அமுதா, அமிர்தவல்லி, புஷ்பா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நகலை தீயிட்டுக் கொளுத்த முயற்சித்தனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.