பெரம்பலூர், ஜூன் 25 - சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர் தொழிலாளர் சங்க பெரம்பலூர் மாவட்ட 5 ஆவது மாநாடு புதன்கிழமை பெரம்பலூர் சமு தாயக் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் குண சேகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் இராமசாமி சிஐடியு கொடியை ஏற்றினார். கிளைச் செயலாளர் மணி வரவேற்புரை ஆற்றி னார். கிளை பொருளாளர் சீனிவாசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாட்டை சிஐடியு மாவட்டச் செய லாளர் அகஸ்டின் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ரெங்கராஜ் செயலாளர் அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் சுரேஷ் வரவு - செலவு அறிக்கையையும் வாசித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கநாதன், மாவட்ட துணைத் தலைவர்கள் - செய லாளர்கள், வெண்டிங் கமிட்டி உறுப்பி னர்கள் வாழ்த்திப் பேசினர். சிறப்பு அழைப்பாளராக சாலையோர வியா பாரிகள் சங்க மாநில கன்வீனர் கருப்பை யன் கலந்து கொண்டு, புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து வைத்து நிறை வுரையாற்றினார். வெண்டிங் கமிட்டி உறுப்பினர் செல்லதுரை நன்றி உரை யாற்றினார். முன்னதாக பழைய பேருந்து நிலை யம் காந்தி சிலை முன்பு பேரணி தொடங்கி, மாநாடு நடைபெறும் சமுதா யக் கூடத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை களை வலியுறுத்தினர்.
தீர்மானங்கள்
நகராட்சி நிர்வாகம், வெண்டிங் கமிட்டி கூட்டத்தை முறையாக அறி வித்து கூட்ட வேண்டும். சாலை யோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டம் 2014-ஐ அமுல் படுத்த வேண்டும். ஆன்-லைன் வர்த்த கத்தை தடுக்க வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டி வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு நலவாரிய பயன்களை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை வலுக் கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும். ஒன்றிய அரசு பிஎம்ஸ்வா நிதி திட்டத்தின்கீழ் சாலை யோர வியாபாரிகளுக்கு வழங்கி வந்த கடன் தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தினை கிராம ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக பன்னீர் செல்வம், செயலாளராக குணசேகரன், பொருளாளராக சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர்களாக ரங்கராஜ், மணி, மாவட்ட துணைத் தலைவர்களாக ராமசாமி, வசந்தகுமாரி, மாவட்ட குழு உறுப்பினர்களாக மாரிமுத்து, விஜயகுமார், தர்மராஜ், சுப்பம்மா, இசக்கிபாண்டி, சுதா, கிருஷ்ணவேணி, பாட்ஷா, செல்லதுரை, வெள்ளை யம்மா, சுரேஷ், சாமிநாதன், கிருஷ்ண மூர்த்தி, தங்கராசு ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.