districts

img

    புதுக்கோட்டை அச்சுறுத்தும் தெருநாய்கள்

அறந்தாங்கி, ஆக.27 -

      புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரத்தில் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களால்  பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  

       அறந்தாங்கியில் உள்ள எல்.என்.புரம், காந்தி நகர் செல்லும் சாலை, களப்பக்காடு, எழில்நகர்  தெருக்களில் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்குச் செல்லும் மக்கள், பகல், இரவு என்று எந்நேரங்களிலும் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.