districts

img

சித்த மருத்துவ நல வாரியம் அமைக்க நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி, ஆக.10 - அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 24 ஆவது மாநில மாநாடு திருச்சியில் சனிக்கிழமை நடை பெற்றது. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார். திமுக முதன்மைச் செயலா ளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாநாட்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது:   சித்த மருத்துவர்கள் மூலிகை வாயிலாக குறைந்த செலவில் எந்த  நோயை குணப்படுத்தலாம் என தின மும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வரு கிறார்கள். அலோபதி மருத்துவம் என்றால் உடனடி தீர்வு; சித்த மருத்து வம் என்றால் நிரந்தர தீர்வு என்று கூறு கிறார்கள். திமுக முன்னாள் கல்வி அமைச்சர்  பேராசிரியர் க.அன்பழகன் ஊசி போட்டது கிடையாது. வாழ்நாள் முழுவ தும் சித்த மருத்துவத்தை கடைப்பிடித்து வந்தார். கலைஞருக்கும் சித்த வைத்தி யத்தைப் பற்றி நன்கு தெரியும்.  திருச்சியில் ஒரு சித்த மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என நான்  கேட்டபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நிச்சயமாக செய்து தருவதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசு 40-க்கு  மேற்பட்ட நல வாரியங்களை செயல் படுத்தி வருகிறது. சித்த மருத்துவர் நல வாரியம் அமைப்பது குறித்து முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன். இதன்  மூலம் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற பல நலத் திட்டங்களை சித்த மருத்துவர்கள் பெற முடியும் என்று அவர் கூறினார். இதில் மாநகராட்சி மேயர் மு.அன்ப ழகன், மத்திய மாவட்டச் செயலாளர், வைரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பின்னர் நடைபெற்ற மாநாட்டில், பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டையில் சித்த மருத்து வப் பல்கலைக்கழகம் அமைக்க நடவ டிக்கை எடுத்து, சித்த மருத்துவக் கல்லூரிக்கு ரூ.42 லட்சம் நிதி ஒதுக்கீடு  செய்தமைக்கும், சித்த மருத்துவத் திற்கு முன்னுரிமை அளிக்கும் தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் நன்றி தெரி விக்கப்பட்டது. சித்த மருத்துவ நல வாரியத்தை தொடங்கி பாரம்பரிய சித்த மருத்து வர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்,  சித்த மருத்துவர்களின் கண்டுபிடிப்பு களுக்கு அங்கீகாரம் வழங்கவும் ஆவன செய்ய வேண்டும். தமிழகத்தில்  உள்ள அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும், அக்குபஞ்சர் கவுன்சில் ஆரம்பிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  நிகழ்ச்சியில் சித்த மருத்துவத் தில் சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட் டது. மாநாட்டில் தமிழகமெங்கும் உள்ள  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  முன்னதாக மருத்துவர் தமிழரசி சுப்பையா வரவேற்றுப் பேசினார். மருத் துவர் விஜய் கார்த்திக் நன்றி கூறி னார்.