districts

img

தங்கம் வென்ற வீராங்கனைகளை வீதியில் நிறுத்திய பாஜக அரசு வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் கண்டனம்

திருவாரூர், ஜூன் 2-

     திருவாரூர் தலைமை தபால்  நிலையம் முன்பு இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம், அகில இந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடு முழுவதும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு  ஆதரவாக பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். அதன்  ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் தலைமை தபால் நிலை யம் முன்பு இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் வேலவன் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

   மாதர் சங்கம் சார்பில் மாவட்டச்  செயலாளர் கோமதி, மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் கண்டன உரை யாற்றினார்.

   அப்போது அவர் பேசுகையில், ‘‘மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர் அவர்களின் குற்றச்சாட்டினை மறுத்து இது வரை பூஷன் சரண் சிங் மீது வழக்கு  தொடராமல் பாஜக அரசு அலட்சி யம் கட்டி வந்தது உச்ச நீதிமன்றம்  நோட்டீஸ் அளித்ததன் அடிப்படை யில் போக் ஷோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலை, கொள்ளை உள்ளிட்ட  பல்வேறு குற்ற வழக்குகள் பிரிஜ்  பூஷன் சரண் சிங் மீது பதியப்பட்டுள் ளன. பெரும்பாலும் பாஜக, ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மீதும் எம்பி, எம்எல்ஏ-கள் மீதும் பல்வேறு  குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 2021 ஆம்  ஆண்டு ராஞ்சி நகரில் விளை யாட்டு வீரர் ஒருவரை கன்னத்தில் தாக்கிய  சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து பாலி யல் குற்றச்சாட்டினை வைத்து வரு கின்றனர்.  

    இவரை மல்யுத்த சம்மேளத் தின் தலைவராக தேர்வு செய்தது மிகவும் கண்டனத்திற்குரியது. பாலியல் சீண்டல் தொடர்பான வழக்குகள் நாட்டிற்கு பெரும் அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களை ஈடுபட்ட உரிமைக்காக குரல் கொடுத்த மல்யுத்த வீரர்கள் மீது  பொய் வழக்குகள் பதியப்பட்டுள் ளன. உடனடியாக இப் பொய் வழக்குகளை தில்லி காவல்துறை திரும்பப் பெற வேண்டும்.

    தங்கம் பதக்கம் வென்ற வீர மங்கைகள் இன்று தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் அவல நிலை பாஜக அரசால் ஏற்பட்டுள் ளது. பெண்கள், பெண் குழந்தை கள் மீதான வன்கொடுமைகள் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

    பெண்கள், பெண் குழந்தை களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு களின் பட்டியலில் இந்தியா முதல்  இடத்தில் உள்ளது. பல்வேறு குற்ற  வழக்குகளில் தொடர்புடைய பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல்களை அரசு கண்டுகொள்ளாமல், தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள் மீது பாலி யல் துன்புறுத்தல்களை கட்ட விழ்த்து விடுவதை ஒருபோதும் மாணவர் அமைப்புகளும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் பொறுத்துக் கொள்ளாது.

    அகில உலக மல்யுத்த சம்மேள னம் பிரிஜ் பூஷண் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகளின் போராட் டத்திற்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் மாதர் சங்கமும், வாலிபர் சங்கமும், மாணவர் சங்கமும் இணைந்து மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக முதற்கட்டமாக இப்ப போராட்டத்தை முன்னெடுத்து உள்ளோம்.

    மேலும் இதுபோன்ற பாஜக  அரசின் அடக்குமுறை தொடருமா னால் எல்லா ஊர்களிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பிரதமர், அமித்ஷாவின் உருவ பொம்மைகளை எரிக்கும்  போராட்டத்தை முன்னெடுப் போம்’’ எனக் கூறினார்.

   போராட்டத்தில் வாலிபர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் மாண வர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.