districts

img

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அறிவியல் கண்காட்சி

திருச்சிராப்பள்ளி, ஜன.15 - தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில்  மாநில அளவிலான அறிவியல் கண் காட்சி திருச்சி தெப்பக்குளம் மேல் நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடந்தது. மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளி கள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளி  அளவில் 8 ஆம் வகுப்பு முதல் 10  ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு கண்காட்சி நடை பெற்றது. இதில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற குழு மற்றும் ஆசிரியர்களில் முதல் இரண்டு  இடங்களைப் பெற்றவர்கள் தங்களது  படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்த னர். இக்கண்காட்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல் உள்பட ஏராள மான தலைப்புகளில் 350-க்கும் மேற்பட்ட  படைப்புகள் இடம் பெற்றிருந்தன. மாநில அளவில் நடைபெறும் இக்கண்காட்சியில் பங்கேற்றவர்களில் தனிப்பட்ட வகை (15 கண்காட்சிகள்), குழு வகை (10 கண்காட்சிகள்), ஆசிரி யர் வகை (10 கண்காட்சிகள்) என மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்ந்தெ டுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக் கப்படும் வெற்றியாளர்கள் காட்சிப்  பொருட்களுடன் ஜன.21 முதல்  25 வரை புதுச்சேரியில் நடைபெறும்  தென்னிந்திய அறிவியல் கண்காட்சி யில் கலந்து கொள்வார்கள். கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி கலந்து கொண்டு, அறிவியல் மாதிரிகளை பார்வையிட்டு சிறந்த  மாதிரி அமைத்த மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  பின்னர் அவர் கூறுகையில், “இது போன்ற கண்காட்சி நிகழ்வுகள் மாண வர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத் தையும் அளிக்கிறது. இளம் விஞ்ஞானி களை உருவாக்குவதன் மூலம் எதிர்கால விஞ்ஞானிகள் இன்றே உருவாகிறார்கள். சமுதாயத்தின் புதிய  தேவைகள், புதிய பிரச்சனைகளுக்கு மாற்றுத் தீர்வு இதனால் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை மாணவர்கள் மனதில் விதையாக இருக்கும்” என்றார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மண்டல தலைவர் மதி வாணன், இணை இயக்குநர் சசிகலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.