districts

img

மாநில அளவில் டேக்வாண்டோ போட்டி பட்டுக்கோட்டை மாணவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், ஜூலை 7-  

    தஞ்சாவூர் சத்யா உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற, மாவட்ட  அளவிலான டேக்வாண்டோ  போட்டியில் பட்டுக்கோட் டையிலிருந்து 10 மாண வர்கள் கலந்து கொண்டனர். இதில், முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.  

   பின்னர், ஜூன் 29 அன்று  திருவாரூரில் உள்ள தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில், பட்டுக்கோட் டையின் சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் முதல் 3 இடங்களை பெற்ற னர். சப்-ஜூனியரில் 16 வரை  உள்ள எடைப் பிரிவில், டி. நிகில் (7) தங்கப் பதக்கமும்,  44 எடை வரை உள்ள பிரி வில் ரெவின் (12) வெள்ளிப் பதக்கமும், பெண்கள் பிரி வில் 63 வரை உள்ள எடை யில் தன்யா (16) வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இதில் மாணவர் நிகில், தேசிய அளவில் நடைபெறும் டேக் வாண்டோ போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.  

   இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டுக் கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கு.பிரி திவ்ராஜ் செளகானை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற னர். மாணவர்களையும், டேக்வாண்டோ பயிற்சியா ளர் கியோஷி நா.நாடிமுத்து வையும் பாராட்டினார்.