கரூர், ஜன.02- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஸ்போர்ட்ஸ் கிளப் கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், ரெட்டியப்பட்டி கிளையின் சார்பில் 23 ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் தொடர் கபடி போட்டி ரெட்டியப்பட்டி பகத்சிங் திட லில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். கபாடி போட்டிக்கு பிரபாகுமார், துரைக் கண்ண்னு ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதி பாசு கபாடி போட்டியை துவக்கிவைத்து உரையாற்றினார். மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதாசெந்தில்மோகன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சிவா, மாவட்ட தலைவர் சதீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். கபாடி போட்டியில் வெற்றிபெற்ற அணி களுக்கு முதல் பரிசு ரூ.30ஆயிரத்து 23, இரண்டாம் பரிசு ரூ. 20 ஆயிரத்து 23,, மூன்று மற்றும் நான்காம் பரிசு தலா 10 ஆயித்து 23 வழங்கப்பட்டது.