புதுக்கோட்டை, நவ.19 - பள்ளிக்கல்வித் துறை நடத்திய நீச்சல் போட்டி யில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் எம்.தனுஷ்கிருஷ்ணன் 200 மீட்டர் ஃபரீ ஸ்டைல் நீச்சல் பிரிவு மற்றும் 100மீ பட்டர் பிளை நீச்சல் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஏழாம் வகுப்பு மாணவர் எம். நிஷாந்த் கிருஷ்ணன் 200 மீட்டர் ஃபரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் முதலிடமும், 50 மீ ஃபரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார். மாவட்ட அவளிலான நீச்சல் போட்டி களில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல் ஆகியோர் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.