மயிலாடுதுறை,செப்.26- மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங் கள் மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங் கள் வழங்கும் விழா நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் கலைஞர் விளை யாட்டு உபகரணங்களை ஊராட்சிமன்ற தலைவர்க ளுக்கும், முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக் கங்களையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், 5 வட்டாரங்களிலுள்ள 241 கிராம பஞ்சாயத்திற்கு 311 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கப்படுகிறது. இதனை கிராம பஞ்சாயத்தில் வசிக் கும் மாணவர்கள், பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி விளையாட் டில் பல சாதனைகள் செய்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.இந்த ஆண்டு அதிக அள வில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு பதிவு செய்து தமிழக அள வில் நமது மாவட்டம் 28,404 பதிவு எண்ணிக்கையை கொண்டு 13 வது இடத்தை பிடித்துள்ளது. மயிலாடுதுறை மாவட் டத்தில் இந்த ஆண்டு முதல மைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளை யாட்டு போட்டிகள் 5 பிரிவு களாக நடத்தப்பட்டதில் பள்ளி பிரிவில் 5789 மாணவ, மாணவிகளும், கல்லூரி பிரிவில் 3570 மாணவ, மாணவிகளும், பொது பிரிவில் 2115 வீரர், வீராங்கனைகளும், அரசு ஊழியர் பிரிவில் 362 வீரர், வீராங்கனைகளும் மற்றும் 128 வீரர், வீராங்கனைகளும் மொத்தம் 11,964 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இதில் முதலிடம் 733 வீரர்களும், இரண்டா மிடம் 732 வீரர்களும், மூன்றா மிடம்; 710 வீரர்களும்; பெற்றுள்ளனர். இந்த ஆண்டில் மாவட்ட அளவில் நடந்த முதலமைச்சர் கோப் பையில் வெற்றி பெற்றவர்க ளில் முதல் பரிசு தலா ரூ.3000, இரண்டாம் பரிசு தலா ரூ.2000-,மூன்றாம் பரிசு தலா ரூ.1000 வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு விளை யாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. மயிலாடுதுறை மாவட் டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில், மயி லாடுதுறை நகர்மன்ற தலை வர் செல்வராஜ் , நகர்மன்ற துணைத் தலைவர் சிவக் குமார், நகர்மன்ற உறுப்பினர் கீதா செந்தில்முருகன் , மயி லாடுதுறை இந்திய விளை யாட்டு ஆணையம் பொ றுப்பு அலுவலர் பெ.மணி வாசகம் ,மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் வை.உமா நாத், மாவட்ட விளையாட்டு அலுவலர்.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.