பாபநாசம், அக்.5- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தில்லை யம்பூர் முதியோர் காப்பகத்தில் பாபநாசம் லயன்ஸ் கிளப், அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம், குடந்தை மருதம் லயன்ஸ் கிளப் சார்பில் முதியோர்களுக்கான விளை யாட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள், அனைத்து முதியோர்களுக்கும் சாக்லேட், பிஸ்கட், வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டன. மேலும் முதியோர் காப்பகம் நிறுவனர் நடராஜனுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். இதில் பாபநாசம் லயன்ஸ் கிளப் இரண்டாம் துணைத் தலைவர் அப்பாஸ் கனி, மாவட்டத் தலைவர்கள் சம்பந் தம், ஆறுமுகம், சாப் ஜான், பிரபாகரன், நவநீத கிருஷ் ணன், கணேசன், தில்லை நாயகி, திலகவதி, விமலா, குடந்தை மருதம் லயன்ஸ் கிளப் தலைவி சங்கரி, இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.