districts

img

நீட் தேர்வு ரத்து கோரி சிறப்பு கருத்தரங்கம்

மயிலாடுதுறை, ஜூலை 28 - நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், என்டிஏ முறைகேடுகளை கண்டித்தும் மயி லாடுதுறை ஆர்.ஓ.ஏ அலுவலகத்தில் இந்திய  மாணவர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் அமுல்காஸ்ட்ரோ தலைமை வகித்தார். தேசிய தேர்வு முகமை யில் நடக்கும் குளறுபடி என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் ஜி.அரவிந்த்சாமி, மாநில  கல்வி உரிமை என்ற தலைப்பில் மாநில துணைத்தலைவர் பா.ஆனந்த், எதிர்கால கடமைகள் தலைப்பில் மாவட்டச் செயலா ளர் ப.மணிபாரதி ஆகியோர் உரையாற்றி னர். ஆர்.பிரவீன் நன்றி கூறினார்.