ஜூலை 24-இல் சிறப்பு குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், ஜூலை 20- தஞ்சாவூர் மாவட்டத் தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜூலை 24 (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறை தீர் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அலுவ லர்கள் கலந்து கொள்வார் கள். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி பயன்பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கூட்டம்
அரியலூர், ஜூலை 20 - அரியலூரில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கூட்டம் சிஐ டியு மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.சிற்றம் பலம் தலைமையில் நடை பெற்றது. இதில் ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் தண்டபாணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி, அருண்பாண் டியன், எஸ்எம்எஸ் தலை வர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜூலை 24 அன்று மாலை அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட் டது. ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜய குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜூலை 26-இல் சிஐடியு ஆர்ப்பாட்டம்
அரியலூர், ஜூலை 20 - அரியலூர் சிஐடியு அலுவலகத்தில் ஜூலை 19 அன்று, தென்னரசு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்டத் துணைத் தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு சிமெண்ட் ஆலை யில் நிலம் கொடுத்தோர் கள், வாரிசு வேலை கேட்பவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். வேலையை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 26 அன்று அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
உடல் பரிசோதனை முகாம்
பொன்னமராவதி, ஜூலை 20 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதியில் உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் முழுஉடல் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமினை ஊராட்சித் தலைவர் செல்வி தொ டங்கி வைத்தார். மதுரை சித்த பண்டிட் சரவணக் குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்தனர். இதில் பரிசோத னைகள் செய்யப்பட்டு மருந்து-மாத்திரை வழங்கப்பட்டது. வார்டு உறுப்பினர் அழகப்பன், ஊராட்சி செயலர் அழ கப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் பிரச்சனைக்காக போராடும் மார்க்சிஸ்ட் கட்சியினரை மிரட்டுவதா?
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கு கண்டனம்
கும்பகோணம், ஜூலை 20 - திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பருத்திச்சேரியில், ஜூலை 15 அன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் நீர்த்தேக்க தொட்டி, மின் கம்பம், குட முருட்டி ஆற்று மரப்பாலத்தை சிமெண்ட் பாலமாக கட்டிக் கொடுத்தல் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த போராட்டம் முடிந்த மறுநாள், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுபா திருநாவுக்கரசு (திமுக) மற்றும் வட்டார வளர்ச்சி அலு வலர்கள், அதிகாரிகள் சம்பந்தப் பட்ட பருத்திச்சேரி கிரா மத்திற்கு வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவர்களிடம் பருத்திச்சேரி கிராமத்தில் அடிப் படை வசதிகள் இல்லாதது குறித்து கூறினார். அப்போது திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திரு நாவுக்கரசு, தன்னிச்சையாக பொறுப்பற்ற தன்மையில், சிபிஎம் உறுப்பினர்களிடம் “நீங்கள் பேர் வாங்குவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்களா? யாரை கேட்டு நடத்தினீர்கள்? கூட்டணி கட்சியில் சீட்டு வாங்கவா?” என தரக்குறை வாக மிரட்டும் பாணியில் பேசியு உள்ளார். இதனையறிந்து கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனி வேல் உள்ளிட்ட சிலர், அங்கு சென்று அதிகாரிகள் மற்றும் ஒன்றியத் தலைவரிடம் கட்சியை அவதூறாக பேசி யதற்கு விளக்கம் கேட்டனர். அதற்கு அவர், “பேர் வாங்கு வதற்காக கூட்டணி கட்சியில் இருந்து கொண்டு பேசு கிறீர்களா? சீட்டு வாங்குவதற் காகவா? என்னை கேட்டு ஆர்ப் பாட்டம் நடத்த வேண்டும். யார் அனுமதியில் செய்தீர்கள்” என்று கேட்டார். அப்போது, எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக் கையுடன் பொதுமக்கள் கூட்டம் கூடியது. இந்நிலையில், அங்கு புதிதாக போடப்பட்ட கீழத்தெரு தார்ச்சாலையை தரமாக இல்லை என்று கூறிய போது, “அப்படித்தான் செய்வோம்” என்று அலட்சியமாகப் பேசி விட்டு, அதிகாரிகளை மட்டும் விட்டுவிட்டு காரில் ஏறிச் சென்று விட்டார். இதனையடுத்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர், “ஒன்றியத் தலைவரின் மக்கள் விரோத பேச்சும் நடவ டிக்கையும் கண்டிக்கத்தக்கது. இதை சம்பந்தப்பட்ட கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் கண்டிக்க வேண்டும். மக்களை அலட்சியப்படுத்தி கோரிக்கைகளை நிறை வேற்றாமல் அவதூறாக பேசி வரும் திருவிடைமருதூர் ஒன்றி யத் தலைவர் சுபா திருநாவுக் கரசு மீது மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை கோரி போராட்டம் நடைபெ றும்” என அதிகாரிகளிடம் தெரி வித்தனர்.
தமிழ் பல்கலைக்கழகத்தில் கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர், ஜூலை 20- வங்கி தேசியமயமாக்கல் தினத்தையொட்டி வெள்ளிக் கிழமை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையின் சார்பில், தஞ்சாவூர் மேக்ஸ் விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவ மனையுடன் இணைந்து இலவசக் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பதிவாளர் சி.தியாகராசன், பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் கூட்டமைப்பு தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தலைமை வகித்து இலவச கண் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்தனர். முகாமில், பாங்க் ஆஃப் இந்தியா முதன்மை மேலாளர் ஜகஸ்பிரியன், கிளை மேலாளர் கவிப்ரியா, அலுவலர் விக்னேஷ் மணிவண்ணன், த.ப.க மக்கள் தொடர்பு அலுவ லர் இரா.சு.முருகன், வங்கி ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பல்கலைக்கழகக் கல்வியாளர்கள், பணி யாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோ தனை செய்யப்பட்டது.
பயிர் மதிப்பீடு ஆய்வு திட்டத்திற்கு பயிற்சி வகுப்பு
பாபநாசம், ஜூலை 20- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட புள்ளியி யல் துறை சார்பில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்டத்திற் கான பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநர் செல்வம் தலைமை வகித்தார். பயிற்சி வகுப்பில் தேசிய புள்ளியியல் நிறுவன முதுநிலை புள்ளியியல் அலுவலர் வெங்கட்ராமன், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்கு நர் மோகன், கும்பகோணம் கோட்ட புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் உதவி இயக்குநர் கவிதா மற்றும் புள்ளியியல் ஆய்வாளர்கள் பயிற்சி அளித்தனர். இதில் பாபநாசம், அம்மாபேட்டை, திருவிடைமரு தூர், கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரங்களைச் சேர்ந்த வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி அலுவ லர்கள், தோட்டக் கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க கூட்டம்
மயிலாடுதுறை, ஜூலை 20 - சிஐடியு மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் உதயசங்கரி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சரளா முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் பா. சாய்சித்ரா சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செய லாளர் ப.மாரியப்பன் பேசினார். மாத ஊதியத்தை காலதாமதம் இல்லாமல் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பணி நிரந்தரம், மாத ஊதியம் ரூ.26,000 வழங்க வலியுறுத்தி, ஜூலை 30 அன்று மாநில சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
கிரேடு சம்பளத்தை பறிப்பதை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 20 - திருச்சி மாநகராட்சி அன்ஸ்கில்டு தொழிலாளர்களுக்கு அரசாணை : 338-ன் படியும் - நீதி மன்ற தீர்ப்புப் படியும் வழங்கப்பட்ட கிரேடு பே ரூ.1900-ஐ மீண்டும் பறிப்பதை கைவிட வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணிஓய்வு பெற்ற அன்ஸ்கில்டு தொழிலாளர்களிடம் நிர்ப்பந்தமாக பத்திரம் எழுதி வாங்கி பணி ஓய்வு பணப் பலன்களை பிடித்து வைத்துக் கொள்ள கூடாது. 2021 ஆம் ஆண்டிற்கு மேல் தொழிலாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்த சிபிஎஸ் பணத்தை முறையாக வரவு வைக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் கொடுக்கப்பட்ட சம்பளத்தை தொழிலாளர்களின் பணி ஓய்வு பணப்பலன்களில் பிடித்தம் செய்வது நீதிக்கு முரணாகவும், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும் செயல்படுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசினார். இதில் ஏராள மான தொழிலாளிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் நாடக விழா தொடக்கம்
தஞ்சாவூர், ஜூலை 20 - தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், தஞ்சாவூர் காவேரி அன்னை கலை மன்றத்தின் 54 ஆம் ஆண்டு நாடக விழா, நாடகப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த நாடகத்தை தஞ்சை மாவட்ட நாடகக் கலைஞர் கள் நலவாழ்வு சங்க முன்னாள் தலைவர் இராபர்ட்சன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நெய்வாசல் நண்பர்கள் கலைக் குழுவின், ‘இந்தியா லிமிடெட்’, திருப்பூர் கொங்கு தமிழ் கலைக்கூடத்தின் ‘பந்தபாசம்’ ஆகிய நாடகங்கள் நடை பெற்றன. மேலும், கோவை கலைரத்னா வீனஸ் அழகுமணிவேல் படத்தை தஞ்சாவூர் காவேரி அன்னை கலை மன்ற நிறுவனத் தலைவர் மா.வீ.முத்து திறந்து வைத்தார். தொடர்ந்து ஜூலை 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் நாள்தோ றும் மாலை 5.30, இரவு 7.30, இரவு 9 மணி என 3 நாடகங்கள் இடம்பெறுகின்றன என கலை மன்றத்தினர் தெரிவித்தனர்.
பொது மயான நுழைவாயில் இடிப்பை எதிர்த்த போராட்டம் ஒத்திவைப்பு
வேதாரண்யம், ஜூலை 20 - நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்குட் பட்ட சமத்துவ பொது மயான நுழைவாயிலை பேரூராட்சி துணைத் தலைவர் கதிரவன் இடித்துள்ளார். துணைத் தலைவர் மீதும், இச்செயலுக்கு உறுதுணையாக இருந்த செயல் அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யாத காவல்துறையை கண்டித்தும், இடித்த நுழைவாயில் கட்டித்தர கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், “இடித்த சமத்துவ பொது மயான நுழைவாயிலை மீண்டும் கட்டித் தருவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, வேதாரண்யம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் தலைஞாயிறு காவல்துறை ஆய்வாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.லதா, சி.பி.ஐ மாவட்ட பொறுப்பா ளர் எஸ்.சம்மந்தம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் அ.ராஜா, விசிக புரட்சிவளவன் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.