மருத்துவ முகாம்
பாபநாசம், பிப்.14 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தை அடுத்த கோபுராஜ புரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. கபிஸ்தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்து வர் அரவிந்த் ராஜா மாண வர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டார். இதில் 3 மாணவர்கள் மேல்சிகிச் சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட னர்.
கலந்தாய்வுக் கூட்டம்
பாபநாசம், பிப்.14 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் மாவட்ட உரிமையி யல் மற்றும் குற்றவியல் நீதி மன்றத்தில் காவல்துறையி னருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. பாபநாசம் நீதிமன்ற நீதிபதி அப்துல் கனி தலைமை வகித்தார். பாபநாசம் ஊரக உட்கோட்டத்தைச் சேர்ந்த பாபநாசம், கபிஸ்தலம், அம்மா பேட்டை உள்ளிட்ட காவல் சர கங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக் கவும், பிடிவாரண்டு பிறப்பிக் கப்பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கவும் வலியுறுத்தப் பட்டது. பாபநாசம் டிஎஸ்பி அசோக், ஆய்வாளர் மகா லட்சுமி, நீதிமன்ற ஊழியர்கள், சட்டப் பணியாளர் தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
மக்கள் குறைகேட்பு கூட்டம்
அரியலூர், பிப்.14- அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து 15 கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண் டார். பின்னர் அந்த மனுக்கள் மீது தீவிர விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுக்கு மாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார். முகாமில் கூடுதல் காவல் கண் காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்
அரியலூர், பிப்.13 - அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலை வளாகத் தில், புலம் பெயர்ந்த தொழிலா ளர்களுக்கான யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. சுகாதாரப் பணிகள் துறை சார்பில் நடைபெற்ற முகா முக்கு வட்டார மருத்துவ அலுவ லர் கார்த்திகா தலைமையி லான மருத்துவக் குழுவினர், 115 வெளிமாநிலத் தொழிலா ளரிகளிடம் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். இந்த யானைக்கால் நோய், க்யூலெக்ஸ் வகை கொசுக் களால் பரப்பப்படும் நோய். இதற்கு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங் களில் இலவசமாக பரிசோ தனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வருவாய்த் துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
புதுக்கோட்டை/கரூர், பிப்.14 - வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக் கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் க. கருப்பையா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலர் ஆர்.ரெங்கசாமி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநிலச் செயலர் அரங்க வீரபாண்டியன், மாவட்ட அமைப்புச் செயலர் க.வசந்தகுமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கரூர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.வைரபெருமாள் தலைமை வகித்தார். இணைச் செயலா ளர் சி.பார்த்தீபன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு.செல்வராணி போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநிலச் செய லாளர் சங்கர், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிப்.17 தஞ்சையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பிப்.17 தஞ்சையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூர், பிப்.14 - தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.17 (சனிக்கிழமை) அன்று காலை 8 மணிமுதல் 3 மணி வரை, தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்ப கோணம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதியுடைய வேலை நாடுவோருக்கு வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர். வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பும் நடைபெறுகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற் கான பதிவு மற்றும் ஆலோசனையும், சுயதொழில் தொடங்குவதற்குரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல் களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமில் கலந்துகொள்ள விருப்ப முள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை நாடுநர்கள் தங்களது சுய விவ ரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பல்கலை.யில் ‘சிவகங்கை செந்தீ’ நாட்டிய நாடகம்
தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறையும், லண்டன் நர்த்தன கலால யம் மற்றும் லண்டன் தமிழவை இணைந்து, ‘சிவகங்கை செந்தீ’ என்னும் நாட்டிய நாட கத்தை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ் வாய்க்கிழமை நடத்தினர். இந்நிகழ்வில், நாடகத்துறைத் தலைவர் முனைவர் செ.கற்பகம் வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் தலைமை வகித்தார். இந்நிகழ் வில் மருதுபாண்டியர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜயா, தமிழ்ப் பல்கலைக்கழகக் கலைப்புலத் தலைவர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து லண்டன் நர்த்தன கலாலயத் தின் சார்பில் “சிவகங்கை செந்தீ” எனும் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இதில், லண்ட னில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் 30 மாணவிகள் பங்கேற்றனர். உயி ரூட்டமான முகத்தோற்றத்துடன், வீரமும் வேட்கையும் கொண்ட வீர மங்கைகளான வேலுநாச்சியாரையும், குயிலியையும் கண்முன்னே நடமாட வைத்து, சிவகங்கை சீமைக்கே அழைத்து சென்றதுடன், மருது சகோதரர்களின் கர்ஜனையை செவிகளில் ஒலிக்கச் செய்தனர். லண்டன் தமிழவை காப்பாளர் புலவர் நல்லதம்பி சிவநாதன் நன்றி கூறினார்.
தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 66 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழில் பெயர்ப் பலகை வைக்காத மற்றும் பணி யாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தராத, 66 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவ டிக்கை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்ப கோணம், பாபநாசம் ஆகிய பகுதி களில் தொழிலாளர் துறை அலுவ லர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர். இதில் 12 கடைகள், நிறுவனங்களில் இருக்கை வசதி ஏற்படுத்தி தரப்படாததும், 54 கடைகள், உணவு நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்படா ததும் கண்டறியப்பட்டது. இந்நிறுவ னங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வணிகர்கள் அனைவரும் தங்க ளது நிறுவன பெயர்ப் பலகையை முதன் மையாக தமிழ் மொழியிலும், பிற மொழி எழுத்துகளைவிட பெரிய அளவி லும் வைக்க அறிவுறுத்தியதாக தஞ்சா வூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தி.கமலா தெரிவித்தார்.
நீதிபதியான பழங்குடிப் பெண்ணுக்கு பாபநாசம் எம்எல்ஏ பாராட்டு
பாபநாசம், பிப்.14 - பழங்குடிப் பெண் ஒருவர் நீதிபதியானது சாதனைக்குரியது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ. வுமான ஜவாஹிருல்லா பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி கிராமமான புலியூர் பகுதியில் பிறந்தவர் ஸ்ரீபதி. ஏலகிரி மலையில் தமிழ் வழியில் கல்வி கற்று, அதன்பின் சட்டப் படிப்பை மேற்கொண்டார். இதற்கிடையில் அவருக்குத் திருமணமான போதும், படிப்பைக் கைவிடாமல் தொடர்ந்து படித்து பட்டப் படிப்பை முடித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்திய உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, ஆறுமாத காலப் பயிற்சிக்குப் பின் நீதிபதி ஆகி றார். இவர், தனக்கு குழந்தை பிறந்த இரண்டு நாட்களிலேயே தேர்வு எழுதி, இந்த சாதனை யைப் படைத்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரி யது. ஜவ்வாது மலையிலிருந்து பழங்குடி பெண் ஒருவர், முதல்முறையாக நீதிபதியாகி பெண் சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார். தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன் னுரிமை என்று திமுக ஆட்சி பிறப்பித்த அரசா ணையின் பயனாளி இவர் என்பது குறிப்பிடத் தக்கது. தடைகள் பல கடந்து அவர் அடைந் துள்ள வெற்றி, சமூக நீதி கொள்கையின் மற் றொரு சாதனையாகும் என தெரிவித்துள்ளார்.
பிப்.16 வேலைநிறுத்த போராட்ட வாயிற்கூட்டம்
கும்பகோணம், பிப்.14 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு போக்கு வரத்து தலைமை அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து பிப்.16 வேலைநிறுத்தப் போராட்ட விளக்க வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர் சிஐடியு தலைவர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். சிஐடியு தொழிலா ளர் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், ஸ்தாபகத் தலைவர் மனோகரன், சிஐடியு மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் ராமசாமி, எஸ்இடிசி மாநில துணை தலைவர் செங்குட்டுவன், ஏஐடியுசி மதிவா ணன், ஐஎன்டியுசி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிப்.16 வேலைநிறுத்தத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்பு
பொன்னமராவதி, பிப்.14 - பிப்ரவரி 16 அகில இந்திய வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார கிளை சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சந்திரா கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். பிப்.16 அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் வேலைநிறுத்த மறியல் போராட்டத்தில், வட்டாரத்தில் உள்ள அங்கன் வாடி ஊழியர்கள் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
பிப்.23 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆட்சியர் அலுவலக குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பிப்.23 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திற னாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி பயன்பெறலாம் என தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இளைஞர் கொலை சம்பவத்தில் 5 பேர் மீது வழக்குப் பதிவு
தஞ்சாவூர், பிப்.14- கொலை வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து, அவர்களைத் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள ரெட்டிப் பாளையம் சாலை காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). இவர் 2021 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூமணி என்கிற மணிகண்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். பிணையில் வெளியே வந்த சதீஷ்குமார், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது நுழைவு வாயில் எதிரே செவ்வாய்க்கிழமை (பிப்.13) பிற்பகல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட் டார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத் தினர் நிகழ்விடத்துக்குச் சென்று அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் சாலை அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த மூட்டை மணி என்ற மணிகண்டன் (32), தஞ்சாவூர் வடக்குவாசல் மேல லைனைச் சேர்ந்த டக்லஸ் மணி என்ற மணிகண்டன் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். சூமணி என்ற மணிகண்டன் கொலை சம்பவத்துக்கு, பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நிகழ்ந்திருப் பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக 5 பேரையும் காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, பிப்.14 - ஊழியர்களுக்கு சாத்தியமற்ற இலக்கு நிர்ண யிப்பதை கைவிட வேண்டும். அஞ்சல் துறையை தனி யார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் கருப்புக் கொடிகளை ஏந்தி அஞ்சல் கோட்ட அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோட்டத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் மருதமுத்து முன்னிலை வகித்தார். செயல் தலைவர் சிவகுமார், துணைச் செயலாளர் கலியபெரு மாள், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தினசரி காய்கறி சந்தை கடைகளில் சுகாதாரச் சீர்கேடு
தொற்று நோய் பரவும் அபாயம் சின்னாளப்பட்டி, பிப்.14- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 115 கடை கள் உள்ளன. இந்த 115 கடைகளில் சுமார் 80 கடைகள் மட்டுமே தற்போது வரை காய்கறிகள் மற்றும் சில வியாபாரங்களை வைத்து வியாபாரிகள் விற்பனை செய் கின்றனர். இந்த கடையில் 3-ஆவது வரிசையில் உள்ள ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப் பட்டுள்ளன. மற்ற கடைகள் இந்த பகுதி யில் கழிப்பறை மற்றும் சுகாதார வளா கங்கள் கட்டப்படாததால் காய்கறி கடை, பூ மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் இந்தப் பகுதியில் சிறுநீர் கழித்து விட்டு செல்கின்றனர். இதனால், துர்நாற்றம் கடுமையாக வீசு கிறது. இதனை சரி செய்ய தினசரி காய் கறி மார்க்கெட் பகுதியில் சுகாதார வளா கம் கட்டிக் கொடுக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததால் கடை கள் முன்பே சிலர் சிறுநீர் கழித்து விட்டுச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வரு கிறது. எனவே நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.