districts

img

டெல்டா மாவட்டங்களில் விரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள்

திருவாரூர், ஆக.12 -

       திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர். பி.ராஜா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

     மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன், மாவட்ட ஊராட்சித்தலை வர் கோ.பாலசுப்ரமணியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

     பின்னர் தொழில் முதலீட்டு  ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தர விற்கிணங்க திருவாரூர் மாவட்டத் தில் நடைபெற்று வரும் பல்வேறு  வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடு கள் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  

    தென் மாவட்டங்களில் அதிக தொழில் பேட்டைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டு தொழில்  நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் களை தொடங்கியுள்ளன. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக் கும். குறிப்பாக டெல்டா மாவட்டங்க ளில் விவசாயம் சார்ந்த தொழிற் பேட்டைகள் தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை யின்படி விரைவில் தொடங்கப்ப டும். தென்மாவட்டங்களில் அதிக தொழில் முதலீடுகள் கொண்டு வரப்படும்” என்றார்.