தஞ்சாவூர், ஜூலை 7- தஞ்சாவூர் மாவட்டத் தைச் சேர்ந்த 7 வயது சிறு வனை, அவரது தாத்தா ஆடு மேய்க்க ரூ.30 ஆயிரம் பெற்றுக் கொண்டு விற்ற நிலையில், அச்சிறுவனை மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர் ஒரு வர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சமூக ஆர் வலர் ஆர்.பிரகாஷ் தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் புகார் மனுவில் கூறியிருப்ப தாவது: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பாப்பாகொல்லை பகுதி யைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 7 வயது சிறுவனை அவரது தாத்தா ரூ.30 ஆயி ரம் பெற்றுக் கொண்டு, இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள ஆடு மேய்ப்பவர்களிடம் விற்றுவிட்டார். இதுகுறித்து கடந்த ஜூன் 28 அன்று தமிழ்நாடு குழந் தைகள் பாதுகாப்பு அலகில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வரு வாய்த் துறையினர் சிறுவ னின் தாத்தாவிடம் விசா ரணை நடத்தியுள்ளனர். அவர் உடனடியாக சிறு வனை அழைத்து வருவதாக கூறிச் சென்றவர் இதுவரை வரவில்லை. சிறுவனை வைத்து ஆடு மேய்ப்பவர்கள், ரூ.30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுத்தால் தான் சிறுவனை விடுவிப்போம் என கூறி யுள்ளனர். இதனால் முதியவர் பணம் இல்லாமல் சிறுவனை மீட்க முடியாமல் தவித்து வருகிறார். எனவே மாவட்ட நிர்வாகம் சிறுவனை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி யுள்ளார்.