திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- திருச்சி மாவட்டம் துறையூர் நகர் பேருந்து நிலையம் அருகில் சாலையோர சிறு வியா பாரிகள் கடை நடைத்தி வருகிறார்கள். ஜூலை 10 அன்று இரவு திடீரென தீ பிடித்த தில், சுமார் 19 கடைகள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து தகவலறிந்த துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் பாதிக்கப்பட்டவர்ளை நேரில் சந்தித்து ஆறு தல் கூறினார். உடனடியாக மாவட்ட ஆட்சி யரை தொடர்பு கொண்டு பாதிக்கப் பட்டவர் களுக்கு தலா ரூ.20 ஆயிரம் இழப்பீடு பெற்று கொடுத்தார். இதையொட்டி சிஐடியு சாலையோர சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமாருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரம ணியன், துறையூர் ஒன்றியச் செயலாளர் ஆனந்தன். ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கிலி துரை, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சிவானந்தம், மூத்த தோழர் பொன்னுசாமி, மாற்றுத் திறனாளி சங்க மாவட்டத் தலை வர் ரவி, சாலையோர வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.