தஞ்சாவூர், ஆக.2- தஞ்சாவூர் பெரியகோயில் அரு கேயுள்ள சிவகங்கை பூங்கா ஆகஸ்ட் 8 ஆம் தேதி திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வுள்ளது என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். இப்பூங்காவில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவர் செய்தியாளர் களிடம் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் மக்கள் மிகவும் எதிர்பார்க்கும் சிவ கங்கை பூங்காவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகஸ்ட் 8 ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளனர். அதே நாளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்படும். இதனிடையே, பணிகளை விரைவு படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தப் பூங்கா ரூ.7 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பித்து, சீர் செய்யப்பட்டுள்ளது. இதில், சிறு வர்களுக்கான விளையாட்டுப் பொருள் கள் அமைக்கப்பட்டுள்ளன. நீச்சல் குளங்கள் படிப்படியாகக் கொண்டு வரப்படவுள்ளன. அருகில் பெரியகோயில் இருப்பதால், தொல்லி யல் துறையினரிடம் ஆலோசனையும், அனுமதியும் பெற்று அடுத்தடுத்து பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டு வரப்படும். இந்தப் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் மாமன்றத்தில் ஒப்புதல் பெற்று, நிர்ணயிக்கப்படும். இத் தொகை மக்களுக்கு இலகுவாகவும், மக்கள் பயன்படுத்தும் விதமாகவும் அமையும்” என்றார். அப்போது, துணை மேயர் அஞ்சு கம் பூபதி, மாநகராட்சி ஆணையர் இரா. மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.