சிவகங்கை, நவ.28- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, வியாழனன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் அபிவிருத்தி திட்டம், அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1,652 லட்சம் மதிப் பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேல் நிலை நீர்தேக்க தொட்டிகளின் கட்டு மானப் பணிகள், வீட்டிற்கான குடிநீர் இணைப்பிற்கான பணிகள், கழிவுநீர் வாய்க் கால் சீரமைப்பு பணிகள், பொது கழிப்பிடம் சீரமைப்பு பணிகள், துணை சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பித்தலுக்கான பணி கள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணி கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதேபோன்று, திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார். இதில் உதவி இயக்குநர் (பேரூராட்சி கள்) சத்தியமூர்த்தி, பேரூராட்சி செயல் அலு வலர் சங்கர் கணேஷ், உதவி செயற்பொறி யாளர் ஜெயகிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.