புதுக்கோட்டை, ஜூலை 20-
மருத்துவத் துறையில் ஒளிவு மறைவு இன்றி தகுதி, திறமையானவர்களுக்கு முன் னுரிமை அளிக்கப்படுகிறது என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன். புதுக்கோட்டை அரசு மருத்து வக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்ட மளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் மொத்தம் 36 அரசு மருத்து வக் கல்லூரிகள் உள்ளது. ஒரு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, 21 சுயநிதி மருத்து வக் கல்லூரிகள், 13 நிகர்நிலை பல்கலைக் கழகம் என 71 மருத்துவக் கல்லூரிகள் உள் ளது. இந்தியாவிலேயே அதிகமான மருத்து வக் கல்லூரிகளைக் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான 7.5 தரவரிசை பட்டியலில் முதல் முறையாக 606 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கு இடம் கிடைத்துள்ளது.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரி டம் தமிழ்நாடு சார்பில் 14 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை உடனடியாக அமைக்க வேண்டும். கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நல வாழ்வு மையங்களுக்கான கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டது. தற்பொழுது தமிழ் நாட்டின் 11 பல் மருத்துவ கல்லூரிகளுக் கும், 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
தற்போது 1021 மருத்துவர்களை அரசு மருத்துவராக ஆக்குவதற்குரிய தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1066 சுகாதார ஆய்வாளர்களை மருத்துவத் துறையில் சேர்ப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. எந்தவித சிபாரிசுமின்றி நேரடியாக தகுதி, திறமை அடிப்படையில் பணியில் சேரும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பணியிட மாறுதல், பணி உயர்வு போன்றவையும் வெளிப்படை தன்மை யோடு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.