districts

img

பேராவூரணி காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு வெள்ளிப் பதக்கம்

தஞ்சாவூர், டிச.18 - காவல் துறையினருக்கு நடத்தப்பட்ட தமிழக அளவி லான போட்டியில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இரண்டாம் இடம் பெற்று  வெள்ளிப் பதக்கம் வென்றார்.  தமிழ்நாடு ஸ்டேட் போலீஸ் டூட்டி மீட் - 2023 என்ற போட்டி  தமிழ்நாடு காவல்துறை சார்பில், மாநில அளவில் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  இதில் பேராவூரணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாள ராக பணிபுரியும் எம்.ராம்குமார் மாநில அளவில், ‘சயின்டிபிக் எய்ட்ஸ் டு இன்வெஸ்டிகேசன், கிரைம் இன்வெஸ் டிகேசன் - ரைட்டர்’ என்ற குற்றப் புலனாய்வு பிரிவில் இரண்டாம்  இடம் பெற்றார்.  இதையடுத்து சென்னையில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு காவல்துறை  தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், உதவி ஆய்வாளர் எம். ராம்குமாருக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கினார். விருது பெற்ற காவல் உதவி ஆய்வாள ருக்கு, உயர் அலுவலர்கள், சக காவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.