districts

விவசாயப் பணிகளில் கூலி வேலை கேட்டால் 144 தடை போடுவதா? விவசாயத் தொழிலாளர் சங்கம் கண்டனம்

மயிலாடுதுறை, ஜூலை 1-  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பருத்திக் குடி கிராமத்தில் கடந்த ஓரிரு  நாட்களுக்கு விவசாயப் பணி களுக்கு கூலி தொழிலாளர்களுக்கு வேலைத் தராமல் நேரடி நெல் விதை தெளிப்பு செய்ததை எதிர்த்த  கூலித்தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னரை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்து சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது.  தங்களது வாழ்வாதாரத்திற் காக வேலைக் கேட்டு போராடிய ஏழைக் கூலித் தொழிலாளர்களை ஒடுக்கும் விதமாக தொடர்ந்து காவல்துறை மூலம் நெருக்கடி களை கொடுத்து வந்த நிலையில், வியாழனன்று மீண்டும் மேலப் பருத்திக்குடியை சேர்ந்த பழனி என்கிற விவசாயி அவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு பணி செய்துக் கொள்வதற்காக மாவட்ட நிர்வாக மும், காவல்துறையும் பருத்திக்குடி  கிராமத்தில் 144 தடை உத்தர வைப் போட்டு நேரடி நெல் விதைப்பு  பணியை மேற்கொள்ள செய்து உள்ளது.  மாவட்ட நிர்வாகத்தின் இந்த நட வடிக்கை அன்றாடம் விவசாய கூலி  வேலைகளை மட்டுமே நம்பி யுள்ள பருத்திக்குடி மக்களை அதி ருப்தியடைய வைத்துள்ளது. இந்நடவடிக்கைக்கு கடும் கண்ட னம் தெரிவித்துள்ள அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையின் அடாவடியான போக்குக்கு விவசா யத் தொழிலாளர் சங்கம் கடும்  கண்டனத்தை தெரிவித்துக்கொள் கிறது.  

விவசாயப் பணிகள் செய்ய தயாராக இருக்கும் விவசாய கூலித் தொழிலாளர்களை நசுக்கும் விதத்தில் குறுவை சாகுபடி பணி களில் நேரடி நெல் விதை தெளிப்பு செய்வதை உடனடியாக கைவிட வேண்டும். ஓரிரு நாட்களுக்கு முன்பு பருத்திக்குடியில் கூலித் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் மீண்டும் அதேப் பகுதியில் மற்றொரு விவ சாயி ஒருவரின் நிலத்தில் நேரடி நெல் விதை தெளிப்பு செய்து கொள்வதற்காக 144 தடை உத்தர விட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  மானாவாரி பகுதிகளில் மட்டுமே  செய்யக்கூடிய நேரடி விதை தெளிப்பை வேண்டுமென்றே கூலித் தொழிலாளர்களை புறக்கணிக்கும்  நோக்கில் ஆற்றுநீர் மற்றும் தமிழக  அரசின் இலவச மின் இணைப்பில் உள்ள பம்ப்செட் வசதிக்கொண்ட நிலங்களில் இம்முறையை மேற் கொள்ளக்கூடாது. இதனால் நாற்று  பறிப்பு, நடவு, களை எடுத்தல் போன்ற எந்த பணிகளும் இல்லா மல் கூலித்தொழிலாளர்கள் கடுமை யாக பாதிக்கப்படுவர்.  எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் விவசாய பணிகள் செய்ய கூலித்தொழிலாளர்கள் தயாராக உள்ள பகுதிகளில் தொழி லாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டுமென்றும் விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.