தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த சாந்தி என்பவரின் கூரை வீடு தீயில் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பாதிக்கப்பட்டவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவியை வழங்கினார். இதில் பேரூராட்சித் தலைவி புனிதவதி, திமுக அய்யம் பேட்டை பேரூர் செயலாளர் வழக்கறிஞர் துளசிஅய்யா, பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன், பாபநாசம் தாசில்தார் மணி கண்டன், ஆர்.ஐ, கிராம நிர்வாக அலுவலர் உட்பட உடனிருந்தனர்.