districts

img

கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமை

நாமக்கல், செப். 23- கல்வி நிலையங்களில் தொடரும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகளை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கல் லூரியில் உள்ளிருப்பு போராட்டம்  திங்க ளன்று நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு  கலைக் கல்லூரி  கல்லூரியில் விலங்கி யல் பேராசிரியராக பணியாற்றி வந்த பிர தாப். மாணவி ஒருவரிடம் பாலி யல் வன்கொடுமை செய்து போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள் ளார். இவர் என்சிசி யில் பணியாற்றும் போது பாலியல் புகாருக்கு உள்ளாக் கப்பட்ட நிலையில் விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அதன் பின் என்சிசி பொறுப்பில் இருந்து விலகினார் என் பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பேராசிரியர் மீது உயர் கல்வித்துறை துறைரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். கல்லூரி  உள் விசாரணைக் குழு இது போலான பிரச்சனைகளில் உரிய தலையீடு செய்ய வேண்டும். மாதந்தோறும் மாண விகளுக்கு நடைபெறக்கூடிய பிரச் சனைகள் குறித்த கேட்டறிந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல் லூரியில் மாணவிகள் பாதுகாப்பான முறையில் கல்வி கற்கும்  சூழலை  கல் லூரி நிர்வாகம் உருவாக்கிட வேண்டும்.  மாணவிகளுக்கு அவ்வப்போது உளவி யல் ஆலோசனை வழங்கிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு இந்திய மாண வர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முகமது நிசார் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர்  தே.சரவணன் கண்டன உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி.கன்னிகா, மாவட்டக் குழு உறுப்பினர் சஞ்சய் உள் ளிட்ட கல்லூரி மாணவ மாணவிகள் திர ளானோர் பங்கேற்றனர்.