புதுக்கோட்டை, ஆக.14-
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் இலவச தையல் இயந்திரம் பெற தகுதி யான நபர்கள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கு மாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்-04322 222270 மூலமோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.