districts

img

கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 24 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட  ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில்  மக்கள் குறைதீர் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செய லாளர் தர்மா ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:  ஸ்ரீரங்கம் 5 ஆவது வார்டு செக்போஸ்ட், அழகிரிபுரம் பகுதி கொள்ளிடம் ஆற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சி யரிடம் பலமுறை மனு கொடுத்துள் ளோம். ஆனால் இன்று வரை நடவ டிக்கை எடுக்காததால் அப்பகுதியில் சாக்கடை நீர் தெப்பமாக மாறி நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலருக்கு தோல் வியாதிகள் வந்த வண்ணம் உள்ளது.  ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலு வலகம் இதை கண்டு கொள்வதே கிடை யாது. மேலும் இப்பகுதியில் சமீபத்தில்  புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க தடுப் பணை, பார்ப்பதற்கு சுற்றுலா நீர்வீழ்ச்சி  போல் உள்ளது. இதனால் இப்பகுதி யில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் வந்து தடுப்பணையில் பல மணிநேரம் குளித்துவிட்டுச் செல் கின்றனர். ஆனால் இங்கு சாக்கடை  நீர் கலக்கிறது என்பது பொதுமக்க ளுக்கு தெரியாது.  குழந்தைகள் குளிக்கும் போது தண்ணீரை குடித்து விடுகிறார்கள். இத னால் ஒரு வகையான அரிப்பு, தோல்  வியாதிக்கு ஆளாகின்றனர். எனவே இதில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு வேண்டுமென கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.  மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது, கிளைச் செயலாளர்  முத்து, மாவட்டக் குழு உறுப்பினர் சந்தானம், பகுதிக் குழு உறுப்பினர்கள் கோவிந்தன், சுப்பிரமணி, சந்துரு ஆகி யோர் இருந்தனர்.