சிவகங்கை, ஜூன் 27-
மானாமதுரை வைகை யாற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து நன் னீராக பயன்பாட்டிற்கு கொண்டுவரும் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட சோனையா கோவில் அருகில், நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத் தின் கீழ் ரூ.9.97 கோடி மதிப் பீட்டில் கசடு கழிவு நீர் சுத்த கரிப்பு நிலையத்திற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற றது. மாவட்ட வருவாய் அலு வலர் மணிவண்ணன் தலை மையில், மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மானா மதுரை நகர்மன்றத் தலை வர்சோ.மாரியப்பன் கென் னடி, நகர்மன்றத் துணைத் தலைவர் பாலசுந்தரம், நக ராட்சி ஆணையாளர் கண் ணன், நகராட்சிப் பொறியா ளர் முத்துக்குமார், திருப்பு வனம் பேரூராட்சித் தலை வர் சேங்கைமாறன், மானா மதுரை ஊராட்சி ஒன்றி யக்குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்துச்சாமி, மானாமதுரை வட்டாட்சியர் ராஜா, ஒப்பந்தக்காரர் சிவ சுந்தரம், நகர்மன்ற உறுப்பி னர் சதீஷ்குமார், திமுக நகர் செயலாளர் பொன்னுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி, அண்ணாத் துரை, தமிழ்மாறன், அற நிலையத்துறை மாவட்டக் குழு உறுப்பினர் ஜெய மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.