கரூர், நவ.29 - சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்த அதானியை கண்டித்தும், உலக நாடுகள் முன்பு இந்தியாவை தலைகுனியச் செய்த அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியும், இந்த ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கே.சக்திவேல், சி.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஹோச்சுமின், ஜீவானந்தம், சுப்பிரமணியன், ரஜேந்திரன், சரவணன், ஒன்றியச் செயலாளர்கள் தர்மலிங்கம், ஆறுமுகம், சுப்பிரமணி, பூரணம், கந்தசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.