districts

img

சிண்டிகேட் அமைத்து பருத்தி விவசாயிகளை வஞ்சிப்பதா? செம்பனார்கோவிலில் சாலை மறியல்

மயிலாடுதுறை, ஜூலை 19 - மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராத தால், பருத்தி விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் திங்களன்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  மயிலாடுதுறை மாவட்டத் தில் நிகழாண்டு 4986  ஹெக்டேரில் விவசாயிகள்  பருத்தி சாகுபடி செய்துள்ள னர். இவர்களில் பெரும் பாலான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும்  பருத்தியை மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்பனார்கோவிலில் அமைந்துள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில்  விற்பனை செய்வது வழக்க மாக உள்ளது.  இதில் செம்பனார்கோ வில் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் வாரந்தோ றும் திங்கள்கிழமை கொள் முதல் நடைபெறும். இதற் காக விவசாயிகள் மூன்று நாட்களுக்கு முன்பே தங்கள் பருத்தி மூட்டைகளுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து காத்தி ருக்கின்றனர். இந்நிலையில் திங்களன்று காலை வர வேண்டிய பருத்தி வியாபாரி கள் மாலை 6 மணியை கடந்தும் வரவில்லை.  இதனால் பருத்தி விவசா யிகள் 500-க்கும் மேற்பட் டோர் மயிலாடுதுறை - தரங் கம்பாடி பிரதான சாலையில் செம்பனார்கோவில் கீழ முக்கூட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வியாபாரிகள் சிண்டி கேட் அமைத்து விவசாயி களை ஒழுங்குமுறை விற் பனை கூடத்துக்கு வரவிடா மல் தடுத்து, விவசாயிகளிட மிருந்து நேரடியாக குறைந்த விலைக்கு பருத்தியை கொள் முதல் செய்ய திட்டமிட்டு, கொள்முதலை புறக்கணிக் கின்றனர். பருத்தி மூட்டை ஒன்றுக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை கூடுதலாக  எடை வைத்து கேட்பதாக வும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்ச னையில் அரசு உடனடியாக தலையிட்டு வாரந்தோறும் தொய்வின்றி கொள்முதல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கோ ரிக்கை விடுத்தனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் செம்பனார்கோ வில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கொள் முதல் தடையின்றி நடை பெற நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.