districts

img

ஜெயங்கொண்டம் கடைவீதியில் பொதுக் கழிப்பறை அமைத்திடுக

அரியலூர், ஜூன்.27- ஜெயங்கொண்டம் கடைவீதியில் பொ துக் கழிப்பறை அமைக்க வேண்டும் என்று  நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப் பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம்  நகராட்சி சாதாரணக்குழு கூட்டம் நகர் மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். முன்ன தாக பொறியாளர் ராஜகோபாலன் வர வேற்றார்.தீர்மானங்களை நகராட்சி மேலா ளர் அன்புச்செல்வி வாசித்தார்.  நகராட்சி செலவினங்கள் உள்ளிட்ட 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஜெயங் கொண்டம் 6 -வது வார்டு கவுன்சிலர் செல்வ ராஜ் பேசுகையில்,  ஜெயங்கொண்டம் கடை வீதியில் பொதுக் கழிப்பறை கட்ட வேண்டும்,  அவ்வாறு இல்லாதபட்சத்தில் தற்காலிக கழிப்பறை அமைக்க வேண்டும். நகராட்சிக் குட்பட்ட பேருந்து நிறுத்தங்களை போதை ஆசாமிகள் பாராக பயன்படுத்துகின்றனர்.அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து வார்டு கவுன்சிலர்கள், வார்டுகளில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், நிர்வாக ரீதியான பிரச்சனைகள் குறித்தும் விரிவாக பேசினர். நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நக ராட்சி ஆணையாளர் அசோக்குமார் ஆகி யோர் அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.