districts

img

திருநாளூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திடுக!

புதுக்கோட்டை, அக்.14- அறந்தாங்கி அருகே சுமார் 6,000 மக்கள் தொகை கொண்ட திருநாளூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப  சுகாதார நிலையம் கொண்டு  வரப்பட வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு பகுதி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய  கிளை துவக்க விழா  சனிக்கிழமை நடைபெற்றது.  விழாவிற்கு கிளைத் தலை வர் டி.ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். செய லாளர் எம்.பிரபாகரன் முன்னிலை வகித்தார். சங்கத் தின் கொடியை மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் ஏற்றி வைத்து சிறப்புரை யாற்றினார்.  திருநாளூர் ஊராட்சி யில் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட் டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை 9 மணிக்கு ஊருக்குள் வந்து சென்ற அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். குளத்திலிருந்து மணலை திருடி விற்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.  பெரியகுளம் ஆக்கிர மிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். சுமார் 6,000 மக்கள்தொகை கொண்ட திருநாளூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.