districts

ஆசிரியர்களுக்கான தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி

அரியலூர், ஜூன் 19-

      அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஜெயங்கொண்டம் ஒன்றி யம் சார்ந்த ஆசிரியர்களுக்கான தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.  

     நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் பன்னீர் செல்வம், வட்டார கல்வி அலுவலர்கள் ராசாத்தி, மதலை ராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ண தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அம்பிகாபதி ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். கீழப்பழுவூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் எழில் வளவன், விரிவுரையாளர் மாலா ஆகியோர் தமிழக  அரசின் கலைசார்ந்த சலுகைகள், பயன்கள் ஆகிய வற்றை எடுத்துக் கூறினர்.  

   மேலும் இந்த பயிற்சியில் மேல்நிலைப்பள்ளி, உயர்  நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் அனைத்து வகை பட்டதாரி ஆசிரியர்கள் 289 பேர் கலந்து கொண்டனர்.