புதுக்கோட்டை, ஆக.22-
மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 7 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஏ.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் பேசினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஐந்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். மாவட்ட முழுவதும் நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலையும், அரசு நிர்ணயித்த கூலியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து செப்டம்பர் 7 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமா னோரை பங்கேற்கச் செய்வது எனவும் மாவட்ட குழு வில் தீர்மானிக்கப்பட்டது.