மயிலாடுதுறை, செப்.19- மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி வணிகவியல் துறை மன்றம் சார்பில் ‘தொழில் நோக்கங் கள் மற்றும் வேலைவாய்ப்புகள்’ குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரியின் துணை முதல்வரும் வணிக வியல் துறை தலைவருமான டாக்டர் எம்.மதிவாணன் தலைமை வகித்தார். புலமுதன்மையர் (டீன்) டாக்டர் எஸ். மயில்வாகனன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தின ராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், பெங்களூரு விப்ரோ டெக்னாலஜிஸ் ப்ராஜெக்ட் மேனேஜர் கே.சரண்ராஜ் கலந்துகொண்டு வணிகவியல் பட்டதாரிகளுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் அதை பெறுவதற்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தொழில்நுட்பத் திறன், மொழித் திறன் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு கூறினார்.