புதுக்கோட்டை, மே 23-
புதுக்கோட்டை மாவட் டம் திருமயம் அருகே சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்துள்ள பெண்மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி மாவட் டக் காவல் கண்காணிப்பாள ரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்மனு அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட் டம் திருமயம் அருகே நச்சாந் துப்பட்டியைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி மைதிலி (38). இவர் அருகே உள்ள ஒச்சம்பட்டி, பிராமணப் பட்டி கிராமங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழுப் பெண்கள் பெற்ற கடன் தொகையை பல்வேறு ஆசைவார்த்தை களை கூறி, தனித்தனியாகப் பேசி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேற்படி பெண்ணிடம் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் வந்திதா பாண்டே யிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்த னர். புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப் பாளர் குற்றப்பிரிவுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து உள்ளார்.