districts

img

மணிகண்டம் ஒன்றியச் செயலாளராக எஸ்.ஏழுமலை தேர்வு

திருச்சிராப்பள்ளி, அக்.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய 9 ஆவது மாநாடு  ஞாயிறன்று இனாம்குளத்தூரில் நடந்தது. மாநாட்டிற்கு பாலன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை மூத்த தோழர் ரத்தினம் ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் துவக்க உரையாற்றினார். இனாம்குளத்தூர் பகுதி யில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மணி கண்டம் ஒன்றியம் முழுவ தும் காவிரி குடிநீர் வழங்க  நடவடிக்கை எடுக்க  வேண்டும். இனாம்குளத் தூர் அரசு மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும். அறியாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. மணிகண்டம் ஒன்றியக் குழு செயலாளராக எஸ்.ஏழு மலை உள்பட 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மாறன் நிறைவுரை யாற்றினார்.