districts

img

டெல்டா மாவட்ட அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு

கும்பகோணம், ஆக.25 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள 75 ஆண்டு கள் பழமை வாய்ந்த  நாச்சியார் கோவில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 2024-25 பள்ளி மேலாண்மை குழு அமைத்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். கூட்டத்தினை பள்ளி மேலாண்மை குழு தேர்வு மேற்பார் வையாளர் மதியழகன் வழி நடத்தினார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், கல்வி யாளர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.  2024-25 ஆம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மை குழுவிற்கு முன்னாள் மாணவர்கள் உட்பட 24  பேர் தேர்வு செய்யப்பட்டு, அதில்  அப்பள்ளியில் பயிலும் மாணவர் களின் பெற்றோர்கள் ஞானதேவி தலைவராகவும், மகாலட்சுமி துணைத் தலைவராகவும், மாண வர் சங்கத்தின் முன்னாள் செயலா ளர் சரவணன், பொருளாளர் சாதிக் பாட்ஷா, செயற்குழு உறுப்பி னர் ராஜேந்திரன் உட்பட 24 பேர்  தேர்வு செய்யப்பட்டனர். பின்பு உறுதிமொழி ஏற்று, சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவாரூர்  திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரி ஒன்றியம் செல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு 2024-2025 ஆம்  ஆண்டிற்கான புதிய பொறுப்பா ளர்கள் தேர்வு நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் செ.ராஜேந்திரன் தலைமையில் தேர்தல் பார்வையாளராக மணக் கால் அய்யம்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் க.கருணா காளிதாசன் கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் க.ராஜ மாணிக்கம், உதவி தலைமை ஆசி ரியர் ஏ.வி.எஸ்.திருபுவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பள்ளி மேலாண்மை குழு  தலைவராக தி.அனிதா, துணைத்  தலைவராக மேனகா, செயற்குழு  உறுப்பினர்களாக ஊராட்சி  மன்றத் தலைவர் க.ராஜமாணிக் கம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரி யர் ச.முத்துகிருஷ்ணன், ஊராட்சி  மன்ற துணைத் தலைவர் ஏலம் பாள், ஊராட்சி உறுப்பினர்  முரு கையன் மற்றும் பெற்றோர்கள்  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட் டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வா கிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.  பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்-புதுப்பட்டி அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்திற்கு, பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்  தலைவர் புவனேஸ்வரி சண்முக சுந்தரம் மற்றும் துணைத்தலைவர் முருகேசன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். வட்டார வள  மேற்பார்வையாளர் நல்லநாகு  புதிதாக தேர்வு செய்யப்பட்ட வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய  வழிமுறைகள் பற்றி சிறப்புரை யாற்றினார். இதில் தலைவராக கவிதா, துணைத் தலைவராக மீனாட்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கல்வியாள ராக ஓய்வுபெற்ற ஆசிரியர் வெங் கட்ராமன் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேற்பனைக்காடு பள்ளி புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், பள்ளி  மேலாண்மை குழு மறு கட்ட மைப்பு செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கீரமங்கலம் அருகே, மேற்ப னைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25 ஆம் ஆண்டு  பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.  பள்ளியின் உதவி தலைமையாசிரி யர் பரமசிவம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கங்கை அரசன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு  தலைவராக ராகினி, துணைத்  தலைவராக கவிதா மற்றும் உள் ளாட்சி பிரதிநிதிகளாக முகமது மூசா, கவிதா மணி, பல்வேறு மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர்களாக தேர்வு செய்யப்பட்ட னர். கிராம நிர்வாக அலுவல‌ர் பிரபு, கிராம உதவியாளர் முத்துச் சாமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். ஆசிரியர் நிர்மலா மனுவேல் நன்றி கூறி னார்.